Breaking News

TNPSC தேர்வுக் கட்டணங்கள் அதிகரிப்பு: ஆன்-லைன் முன்பதிவுக் கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150 ஆக உயர்வு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சிநடத்தும்போட்டித் தேர்வுகளுக்கான கட்டண விகிதங்கள் மாற்றி
அமைக்கப்பட்டுள்ளன.ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும்வகையிலான ஒரு முறை ஆன்-லைன் முன்பதிவுக்கான கட்டணம்ரூ.30-லிருந்து 5 மடங்கு அதிகரித்து ரூ.150-ஆகஉயர்த்தப்பட்டுள்ளது

இதுகுறித்துதலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்வெளியிட்ட உத்தரவு:

நேரடி எழுத்துத் தேர்வுகள்தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), அரசுத் துறைகளுக்கு போட்டித்தேர்வுகளை நடத்துகிறதுஅதன்படிநேரடி நியமனம் மூலமாகநிரப்பப்படும் தமிழ்நாடு மாநிலப் பணிகளுக்கு நடைபெறும் எழுத்துத்தேர்வுக்கான கட்டணம் இப்போது ரூ.125-ஆக உள்ளதுஇதுரூ.200-ஆக உயர்த்தப்படுகிறது.
சார்புப் பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம்ரூ.100-லிருந்து ரூ.150-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சார்புப் பணிகள்அமைச்சுப் பணிகள்நீதி அமைச்சுப்பணிகள்தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி ஆகியவற்றுக்கானஎழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.

முதல்நிலைத் தேர்வுஅனைத்து வகையான பணிகளுக்கு நடத்தப்படும்முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆகவும்ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒருமுறை ஆன்-லைன்பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150-ஆகவும்அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்),மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் பட்டப் படிப்புப்படித்திருந்தால்அவர்களுக்கு மூன்று முறை கட்டணம் செலுத்துவதில்இருந்து விலக்கு அளிக்கப்படும்.

மார்ச் 1 முதல்....இந்தப் புதிய கட்டண மாற்றங்கள் அனைத்தும் மார்ச் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தலைமைச் செயலாளர்கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.