Breaking News

ELEMENTARY TRANSFER COUNSELLING DATES

8.8.15- AEEO TRANSFER, MIDDLE SCH HM TO AEEO PROMOTION

16.8.15- MDL SCH HM TRANSFER, ,HM PROMOTION,B.T DEPLOYMENT, B.T BLOCK         TRANSFER, B.T PROMOTION, DIST B.T TRANSFER.

17.8.15- ELE.HM TRANSFER, ELE.HM PROMOTION, SEC.GR DEPLOYMENT

22.08.15-L SEC GR TRANSFER (BLOCK LEVEL),SEC GR TRANSFER DISTRICT LVL

29.8.15 - BT DISTRICT TO DISTRICT(THROUGH INTERNET)

30.8.15 - SEC GR DIST TO DIST ( THROUGH INTERNET)



வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியிருக்கும் 3 புதிய வசதிகள் – ஆக்டிவேட் செய்யும் வழிமுறை

பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் 3 புதிய வசதிகளுடன் கூடிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வசதிகளை அப்டேட் செய்யப்பட்ட லேட்டஸ்ட் பதிப்பான V.2.12.194 -ஐ டவுண்லோடு செய்து பெறலாம்.
3 புதிய வசதிகளின் விபரம் பின்வருமாறு:-
மெசேஜ்களை நீங்கள் விரும்பும் போது படித்துக் கொள்ளும் வசதி
நமக்கு வரும் மெசேஜ்களை நாம் விரும்பும் போது படிக்கும் வகையில் Mark as Unread option வசதியை வழங்கியிருக்கிறது வாட்ஸ் ஆப். இந்த வசதியை பெற உரையாடல்களில் லாங் பிரஸ்ஸிங் செய்தால் archive chat, delete chat, email chat options-க்கு அடுத்ததாக Mark as Unread என்ற மெனு தோன்றும்.

ஜாக்டோ உண்ணாவிரத போராட்டம்

முக்கிய செய்தி...சற்றுமுன் கிடைத்த தகவல் ஆகஸ்ட் 1ந்தேதி 15அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஜேக்டோ உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும்...

முக்கிய செய்தி...சற்றுமுன் கிடைத்த தகவல் ஆகஸ்ட் 1ந்தேதி 15அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஜேக்டோ உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும்.... தற்சமயம் சென்னையில் நடைபெற்று கொண்டு இருக்கக்கூடிய ஜோக்டோ மாநில உயர்மட்டக்குழு பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு.
தற்சமயம் சென்னையில் நடைபெற்று கொண்டு இருக்கக்கூடிய ஜோக்டோ மாநில உயர்மட்டக்குழு பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு.

Flash News: கலந்தாய்வு நெறிமுறைகளில் மாற்றம்: 3ஆண்டுகள் என்பது ஓராண்டாக குறைப்பு.

கலந்தாய்வு நெறிமுறைகளில் மாற்றம்:
3ஆண்டுகள் என்பது ஓராண்டாக குறைப்பு.
6-8-2015 வரை விண்ணப்பம் பெறப்படும்.
8-8 -15 முதல் கலந்தாய்வு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குரூப் 2 கீ ஆன்சர் வெளியீடு


சுமார் 4.78 லட்சம் பேர் எழுதிய குரூப் 2 தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 2 பதவியில் அடங்கிய 18 வகையான பதவிகளில் 1,241 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு மாநிலம் முழுவதும் 6 லட்சத்து 20 ஆயிரத்து 220 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 4 லட்சத்து 78 ஆயிரத்து 782 பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட் இன்னும் 2 மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

கற்பித்தலில் அலட்சியம்: இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட்


அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் பிரமாண்ட நினைவிடம்: மத்திய அரசு கட்டுகிறது

பாரத ரத்னா அப்துல் கலாம் நேற்று முன்தினம் இரவு 7.35 மணிக்கு ஷில்லாங்கில் மறைந்த தகவல் உடனடியாக டெல்லியில் உள்ள மத்திய மந்திரிசபை செயலாளர் பி.கே. சின்கா, உள்துறை செயலாளர் எல்.சி. கோயல் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் உடலை டெல்லி கொண்டு வருதல், அஞ்சலி செலுத்துதல், இறுதி சடங்கு போன்றவை குறித்து பிரதமர் மோடி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். டெல்லியில் அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்ய முதலில் முடிவு செய்யப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு ஆதார் அட்டை இனி, கட்டாயம்! 60 நாட்களுக்குள் எடுக்க காலக்கெடு!

அனைத்து கருவூலத்திற்கும் ஆணையர் இது சார்ந்து ஓர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில் 60 நாட்களுக்குள் அனைத்து ஊழியர்களின்  ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி ஆசிரியரை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் கைது

பள்ளி ஆசிரியரை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் நான்குபேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி, புளியங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியராக இருப்பவர் சவுந்தரராஜன் 52. இவரது வகுப்பில் பயிலும் மாணவர்கள் சிலர் கடந்த வியாழக்கிழமை வகுப்பிற்கு வராமல் கட் அடித்தனர். 
இதனையறிந்த ஆசிரியர் மாணவர்களை அழைத்து கண்டித்துள்ளார். நேற்று காலை 9 மணியளவில் ஆசிரியர் சவுந்தரராஜன், தமது மகளை அங்குள்ள துவக்கப்பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்துள்ளார்.

தொடக்க கல்வியில் 50:50 முறை மீண்டும் வருமா: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

தமிழக அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு எற்கெனவே நடைமுறையில் இருந்த '50 சதவீதம் பதவி உயர்வு; 50 சதவீதம் நேரடி நியமனம்' முறை பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் (2001- 2006) அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்வது எனவும், தொடக்க கல்வியில் அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவர் விகிதாசாரம் கணக்கில் கொள்ளாமல் வகுப்பிற்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம் பணியிடங்கள் உருவாக்கவும் முடிவானது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் நேரடியாகவும், பதவி உயர்வு மூலமாகவும் அந்த இடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டன.

30.7.2015 வியாழன் விடமுறை

அனைத்து பள்ளி கல்லுரிகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு

"அப்துல்கலாம்"‬ என்றொரு தமிழன் - வாழ்க்கையும் கல்வியும்...

      
  கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில், ஒரு படகுச் சொந்தக்காரரும் மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் அவர்களுக்கும், இல்லத்தரசி ஆஷியம்மா அவர்களுக்கும், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில், மகனாகப் பிறந்தார். 

கலாமின் கடைசி நிமிடங்கள்


ஜூலை 27 - அப்துல் கலாம் ஷில்லாங் சென்றபோது, அவருடன் சென்ற ஸ்ரீஜன்பால் சிங் என்பவர் தனது அனுபவத்தை முகநூலில் எழுதி உள்ளார். அவர் கூறியதன் முக்கிய சாராம்சம்: ஷில்லாங் மேலாண்மை கல்லூரியில் அளிக்கப்பட்ட வரவேற்புக்குப் பிறகு நாங்கள் சொற்பொழிவு அறைக்குள் நுழைந்தோம். மேடை ஏறியதும் அவர் பேசுவதற்கு தயார் செய்தேன். அதைப் பார்த்து சிரித்தார். ""எப்படி இருக்கீங்க'' என்று என்னைப் பார்த்து கேட்டார். நானும் "நன்றாக இருக்கிறேன்'' என பதில் அளித்தேன். 

பேச துவங்கி, ஒரு வாக்கியத்தை முடித்ததுமே அவரிடம் ஒரு அமைதி ஏற்பட்டது. நான் அவரைப் பார்த்தேன். திடீரென அப்படியே சரிந்து விழுந்தார்.

வல்லரசு இந்தியாவின் கனவு நாயகனே- உனக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி

அகஇ - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வாயிலாக பள்ளிகளில் கழிவறைகள் கட்டிதருதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்....


மதுவின் தீமைகள்: மாணவர்களுக்கு அறிவுறுத்த கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் பரவும் மது குடிக்கும் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில், பள்ளி மாணவர்கள், மாணவிகள் பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில் மது அருந்துவது ரகளை செய்வது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளில் மாற்றம்: ஆசிரியர்கள் எதிர்ப்பு எதிரொலி


நெல்லை: ஆசிரியர்களின் எதிர்ப்பால் இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளை  மாற்ற கலவித்துறை முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து  ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஆண்டுதோறும்  மே மாதம் நடந்து வந்தது. ஆனால், கடந்த இரண்டு  ஆண்டுகளாக கலந்தாய்வு தாமதமாக நடத்தப்பட்டு வருகிறது. 2015-16க்கான கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

வினாயகா மிஷன் மூலம் பெறப்பபட்ட பி.எட் படிப்பு அரசின் ஆணை பெற்ற பின்னர் பரிந்துரைக்கப்படும்- RTI விளக்கம்


விடுமுறைக் கதைகள்-நல்ல மனம்வாழ்க

பூலோகத்தில், கிருஷ்ணதேவன் என்று ஒரு அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் நற்குணங்களின் பிறப்பிடம்; எத்தகைய கெட்ட தன்மையிலும் நல்லதையே காணும் சிறப்பு குணம் கொண்டவன்.
இம்மன்னனின் குணங்களைப் பற்றி ஒருநாள் தேவர்களிடம் சிலாகித்துப் பேசினான் தேவேந்திரன்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவர்களில் ஒருவன், ‘இந்த தேவேந்திரன் சொல்லும் அந்த அரசனை சோதித்து பார்க்க வேண்டும்…’ என்று நினைத்தான்.
அதன்படி, கிருஷ்ணதேவன் நாட்டிற்கு வந்தவன், அரசன் வரும் வழியில், ஒரு நாயைப் போல் தன் வடிவத்தை மாற்றி, இறந்து கிடப்பது போல் படுத்திருந்தான்.
செத்துக் கிடந்த நாயின் உடம்பில் இருந்து துர்நாற்றம் வீசியது. அந்தப் பக்கம் போன அனைவரும், நாற்றத்தைத் தாங்க முடியாமல், மூக்கைப் பொத்தியபடி சென்றனர்.
அதேசமயம் அந்தப்பக்கம் வந்த அரசன், நாயின் துர்நாற்றத்தை பொருட்படுத்தாமல், ‘இறந்துபோன இந்த நாய்க்குத்தான் எத்தனை அழகான பல்வரிசை…’ என்று சொல்லி, ஆச்சரியப்பட்டான்.

விடுமுறை கதைகள்- கொடுப்பவர் போல் நடிக்காதீர்

பாரசீக மன்னர் ஒருவர் ஆண்டுதோறும் தன் நாட்டு வீரர்களுக்கு போட்டி ஒன்றை நடத்துவார். ஆனால், கஞ்சப்பிரபுவான அவருக்கு பரிசு கொடுக்க மனம் வராது. ஒருமுறை, நவரத்தினங்கள் பதித்த மோதிரம் ஒன்றை ஒரு கயிற்றில் கோர்த்து, அரண்மனை மேலுள்ள மினாரில் தொங்கவிட்டார். அந்த மோதிரம் யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்ற எண்ணத்திலேயே அவ்வாறு செய்தார்.
மோதிரத்தை எடுக்க வேண்டும் என்பதே போட்டி! அதை எடுக்க பல வீரர்கள் வந்தனர். அதன்மீது அம்பை எய்தனர். ஊஹும்... யாருக்கும் மோதிரம் கிடைக்கவில்லை.

அதிகார பிரச்னைகளால் பி.எட்., சேர்க்கை இழுபறி:உச்சகட்ட குழப்பத்தில் தடுமாறும் கல்வித்துறை

பல துறைகளின் அதிகார பிரச்னையால், பி.எட்., மாணவர் சேர்க்கை குறித்த முடிவுகள் எடுப்பதில், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி ஆண்டு எப்போது துவங்கும் என்பதை கூட, கல்லுாரிக் கல்வி இயக்ககம் இன்னும் முடிவு செய்யவில்லை.

தமிழகம் முழுவதும், ஏழு அரசு; 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகள் உட்பட, 690 பி.எட்., - எம்.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவை, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான என்.சி.டி.இ., அங்கீகாரத்துடன், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில் உள்ளன.
இந்த ஆண்டு பி.எட்., மாணவர் சேர்க்கை ஆயத்த பணி இன்னும் துவங்காததால், மாணவர், பேராசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஓவியம், தையல் பாடம் ஆய்வு செய்ய சிறப்பு குழு

அரசு பள்ளிகளில் ஓவியம், தையல், உடற்கல்வி படிப்புகளுக்கான, பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க, பள்ளிக்கல்வித் துறையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்வி படிப்புகளுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், 20 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, பாடம் நடத்துவது குறித்து, சில ஆண்டுகளாக, எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை.

அத்துடன், பாடத்திட்ட விவரங்களையும் அளிக்கவில்லை. ஆனால், 2014ல் உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தை பின்பற்றும்படி மட்டும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து, பாடத்திட்டம் குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் கேட்டனர். 'பாடத்திட்டம் எங்கே' என,

அரசு பள்ளி பராமரிப்பு நிதியில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க உத்தரவு

சிவகங்கை:அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கும் பராமரிப்பு நிதியில், முழு சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் பள்ளி மானிய, பராமரிப்பு நிதி வழங்குகிறது. பள்ளிகளின் எண்ணிக்கையை பொறுத்து 2 கோடி ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மானிய நிதியில் பள்ளிகளுக்கு தேவையான பொருட்கள் வாங்க வேண்டும். பராமரிப்பு நிதியில் கழிப்பறை வசதி, கூடுதல் கட்டடம், கட்டடம் பழுது பார்த்தல் போன்ற பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்வது நடைமுறையில் இருந்தது.

இவ்வாண்டுக்கான பள்ளி பராமரிப்பு நிதியில் சுகாதார மேம்பாடுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும் போதிய கழிப்பறை வசதி, இரு பாலர் பள்ளிகளில் தனித்தனி கழிப்பறை, பழுதான கழிப்பறைகளை பழுது பார்த்தல், கழிப்பறைகளை சுத்தமாக பராமரித்தல், தரை மட்டம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 'செப்டிக் டேங்க்' ஏற்படுத்துதல், தண்ணீர் பற்றாக்குறைக்கு போர்வெல் அமைத்தல் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக அனைத்து மாவட்ட
எஸ்.எஸ்.ஏ., கல்வித்திட்ட அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

கிராமப்புற தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு

அரசு தொடக்கப்பள்ளிகளில், கடந்த கல்வியாண்டை காட்டிலும், 20 சதவீதம் வரை, மாணவர் சேர்க்கை சரிவடைந்துள்ளது. கடந்த கல்வியாண்டில் துவக்கப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி மீதும் பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டதால், கிராமப்புறங்களில் கூட, மாணவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.


அனுமதி:தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஆண்டுக்காண்டு, மாணவர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நர்சரி பிரைமரி பள்ளிகளில், பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளை சேர்ப்பதால், அரசு தொடக்கப்பள்ளிகளில், படிக்க ஆள் இல்லாத சூழல் உருவாகி வருகிறது.

ஓய்வூதிய ஒழுங்கு முறை ஆணையத்திற்கு - தமிழக அரசின் பாக்கி ரூ.14 ஆயிரம் கோடி.


மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளை கண்காணிக்க இணை இயக்குனரை தலைவராக கொண்ட கண்காணிப்பு குழு- பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தகவல்

இணை இயக்குனரை தலைவராக கொண்ட கண்காணிப்பு குழு அமைத்து, மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளை கண்காணிக்கவும், பின்தங்கிய பள்ளிகளில் முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.


தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு, ஒதுக்கீடு செய்துள்ள, பல ஆயிரம் கோடி நிதியை மூலதனமாக்கி, சிறந்தகல்வியை வழங்கி, எஸ்.எஸ்.எல்.ஸி.,மற்றும் ப்ளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண்ணுடன் மாணவ, மாணவியரை தேர்ச்சி பெற வைப்பதே ஆசிரியர்களின் தலையாய பணி இவ்வாறுபள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

G.O NO. 264

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விதிகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது - பள்ளிக்கல்வி இயக்குனர்


டி.என்.பி.எஸ்.சி., தேர்வு விவரம் இணையதளத்தில் வெளியீடு


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும், பணி நியமனம் மற்றும் துறைகள் குறித்த பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தமிழக அரசு துறைகளிலுள்ள பல்வேறு பதவிகளுக்கு, பணி நியமனத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் - 1, 1ஏ, 2, குரூப் - 4 என, குரூப் - 8 வரையிலான, படிநிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இந்தப் பதவிகள் என்ன; தேர்வுகள் நடக்கும் முறை என்ன; தங்கள் விண்ணப்பத்தின் நிலை என்ன என்பது குறித்து, விண்ணப்பதாரர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யை அணுகிய வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் மற்றும் பட்டதாரிகளின், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், பதவிகள், துறைகள் மற்றும் தேர்வுகள் குறித்த முழுமையான விவரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த விவரங்களை, http://www.tnpsc.gov.in/recruitment-faq.pdf என்ற இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம்

பத்தாம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் மாற்றம்: பள்ளி கல்வி இயக்குனர் பேட்டி


மதுரை: "இந்தாண்டு பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட உள்ளது" என பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.மதுரையில் மண்டல அளவிலான கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு குறித்தும், இவ்வாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தேவையான நடவடிக்கை குறித்தும் வேலூர், கடலூர், திருச்சி, மதுரை மண்டலங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடந்தன. இதன்பின் நெல்லை, கோவை, காஞ்சிபுரத்தில் நடக்கிறது.மாநிலத்தில் அரசு பள்ளிகளில் 90 சதவீதத்திற்கு மேல் கழிப்பறை வசதி உள்ளது. இதுதவிர எஸ்.எஸ்.ஏ., திட்டம் மற்றும் என்.எல்.சி., சார்பில் 1500 கழிப்பறைகள் வசதி செய்யப்பட்டு நூறு சதவீத வசதியை எட்டியுள்ளது.முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பட்டியல் தயாராக உள்ளது. விரைவில் வெளியிடப்படும்.

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது (INSPIRE AWARD) - 2015/2016 ஆம் ஆண்டிற்கான விண்ணபங்களை "ONLINE " இல் அனைத்து பள்ளிகளும் பதிவு செய்யலாம் - பதிவிடும் முறை குறித்து "தமிழ்நாடு அறிவியல் மையம்" இயக்குனரின் செயல்முறைகள்

மாநில திட்ட இயக்ககம் மற்றும் மாவட்டங்களில் பணிபுரியும் ஆலசகர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களின் தொகுப்பூதியத்தை 1.04.2015 முதல் உயர்த்துதல்.,. Incharge BRT S AND BRT travelling allowance raised....


Instructions as received to all blocks to ensure 100%attendence for ALM CRC & SABL Special CRC 25.07.2015


விசுபரூபம் எடுக்கிறது ஆசிரியர் பணிமாறுதல் கவுன்சிலிங்.,

பள்ளிக்கல்வித் துறையின் மூன்று ஆண்டுகள் பணியிடம் மாறுதல் தடை ஏன்?,,,
மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவா?
அப்படியானால் மாணவர்களின் நலனில் இதுவரை அக்கறை காட்டவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறதோ? பள்ளிக்கல்வித்துறை.???

இதைப்பற்றி மலைவாழ் பெற்றோரிடம் கேட்டதற்கு 
சார் இதெல்லாம் அரசியல் வாதிங்க காசு பிடுங்க பன்றது சார் ஆமா சார் எங்க மலைக்கு வர்ற வாத்திமாருங்க ஒரே வரிசத்தில்ல ஓடிருராங்க. அடுத்த வாத்தியார் வற ரெண்டு வருசம் ஆகும் ஏதோ டெபுடேசன் போட்டு ஓட்டுறாங்க எல்லாம் காசு வாங்கதான் சார் என்றார் ... இதில் இருக்கும் உண்மையை புறிந்து கொள்ளுங்கள் ..

ஒருவர் ஒரு இடத்தில் இருந்து பணிமாறுதல் பெற்றுவிட்டால் அந்த இடத்திற்கு வேறு ஒருவர் வந்துவிடுவார் தானே.,

இந்த மாதம் சிக்கல் நீட்டிப்பு...புதி சம்பள திட்டமுறையால் பாதிப்பு.,


குடி போதையில் பள்ளிக்கு வந்த மாணவர் டிஸ்மிஸ் மீண்டும் சேர்க்க கலெக்டர் பரிந்துரை நிராகரித்த பள்ளிதலைமை ஆசிரியர்


பள்ளி பராமரிப்பு பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை.

பள்ளிகளில் பராமரிப்புப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகளில் பாதுகாப்பற்ற, ஆபத்தான பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ளது. அதன் விவரம்:- பள்ளி வளாகங்களில் உள்ள முட்புதர்களை அகற்றுதல், பழைய கட்டட இடிபாடுகளை அகற்றுதல், கழிவுப் பொருள்களை அகற்றுதல், பள்ளி வளாகம்

7th Pay commission. latest news.

Likely to be submitted on or before 14.8.15.
1. Minimum pay 21000/-
2. No grade pay system and open ended scales.
3. Retirement - 33yrs of service or 60yrs of age whichever is earlier.
4. HRA 30% CCA to be reinforced.

5. Categories of posts to be modified.
6.Date of effect from 1.1.2016.
7. Calculations 2.86 x basic pay agreed.
Source www.staffnews.com

25/07/2015 "UPPER PRIMARY CRC MODULES"

25.07.2015 அன்று நடைபெற உள்ள குறுவள பயிற்சியில் அனைத்து உயர்/மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனர்

25.07.2015 அன்று நடைபெற உள்ள குறுவள பயிற்சியில் அனைத்து உயர்/மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அதனை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்து சரி  பார்க்க வேண்டுமெனவும் இனிவரும் அனைத்து குறுவள பயிற்சிகளிலும் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பதனை  உறுதி செய்யவும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி குழந்தைகளை எப்படி நடத்தவேண்டும் புதிய விதிமுறை அரசு இணையதளத்தில்


`மழலை வகுப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும், குழந்தைகளை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
`தமிழ்நாட்டில் பிரிகே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி.ஆகிய
வகுப்புகள் படிக்கக்கூடிய குழந்தைகளை எப்படி நடத்தவேண்டும் என்றும் அவர்கள் இருக்கும் வகுப்பறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை புதிய விதிமுறைகளை வகுத்து தமிழ்நாடு அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* பிரிகே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் பெட்ரோல் பங்குகளில் இருந்து 300 அடி தள்ளி அமைத்தல்.

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு: பணியாற்றிய காலத்தை ஓராண்டாகக் குறைக்க வலியுறுத்தல்


ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஒரே பள்ளியில் மூன்று ஆண்டுகள் 
பணியாற்றியிருக்க வேண்டும் என்பதை ஓராண்டாகக் குறைக்க வேண்டும் என தலைமையாசிரியர்கள் வலியுறுத்தினர்.இந்தக் கோரிக்கை தொடர்பாக 
பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதாவிடமும் அவர்கள் கோரிக்கைமனுவை வழங்கியுள்ளனர். 

இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வே.நடராசன், பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் வழங்கியுள்ள மனு விவரம்:-

ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் அதே பள்ளியில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதியை ஓராண்டாகக் குறைக்க வேண்டும்.அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் வட்டாரவள மேற்பார்வையாளர்கள் பணியிடங்கள் கலைக்கப்பட்டதால், அங்கு பணியாற்றிய 380 பேர் வெளி மாவட்டங்களுக்கு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக நிர்வாக மாறுதல் செய்யப்பட்டனர். இவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் சொந்த மாவட்டங்களில் பணியாற்ற அரசாணையில் உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

பள்ளிக்குள் தகராறு செய்தஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'

திருப்பூர்:முன்விரோதத்தால், பள்ளிக்குள் தகராறு செய்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.திருப்பூர் ஆண்டிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியர் சகாயராணியும், பட்டதாரி ஆசிரியர் முதலியப்பனும், கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில், தெற்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
அழகர்சாமி விசாரணை நடத்தினார்.

அப்போது, சகாயராணி, பள்ளிக்கு வெளியாட்கள் சிலரை அழைத்து வந்தார். போலீசார் வரவழைக்கப்பட்டதால், அந்த நபர்கள் தப்பியோடிவிட்டனர்.இதுபற்றி விசாரணை நடத்திய, முதன்மை கல்வி அலுவலர் முருகன், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், தகராறில் ஈடுபட்ட சகாயராணி, முதலியப்பன் ஆகிய இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். இருவர் மீதும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.

அரசுப்பள்ளி-மாணவி மற்றும் ஆசிரியை….மெக்சிகோ பயணம்


அரசுப்பள்ளி-மாணவி மற்றும் ஆசிரியை….மெக்சிகோ பயணம்
அவர்களின் பயணம் நமது கையில்:
கரூர் மாவட்டம் ஆச்சிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கடந்த 9 மாதங்களாக பரவலாக எல்லோராலும் பாராட்டப்பட்டு வருவதும்,அதற்கான காரணமும்…. நமது ஆசிரியர்கள் பெரும்பான்மையோருக்கு நன்கு தெரியும்.
தெரியாதவருக்கு…….
கடந்த வருடம் ஜூலை மாதம், நமது மாநில SSA(அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்ககம்) மூலம் PBL(Project Based Learning) என்ற பயிற்சி தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆசிரியப் பயிற்றுனர் வழியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 40 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

அவரவர் பள்ளிகளில் உள்ள பிரச்சனைகளை மையமாக வைத்து அதைத் தீர்க்கும் வகையில் செயல்திட்டம் ஒன்று செய்து ஆவணப்படுத்தி ஆகஸ்ட் மாதம் இறுதி / செப்டம்பர் முதல் வாரத்தில் ஒப்படைக்க வேண்டும் , என்பது குறிப்பு.
இது ஒரு போட்டிக்கான செயல்பாடு.

CRC பயிற்சி வகுப்பு புறக்கணிப்பு:4,000 ஆசிரியர்களுக்கு அதிரடி "நோட்டீஸ்'

தொடக்கக்கல்வித்துறையில், குறுவள மைய பயிற்சி வகுப்பை புறக்கணித்த, 4,000 ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக, நோட்டீஸ் வழங்கப்பட்ட சம்பவம், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், 385 யூனியன்களில் உள்ள வட்டார வளமையங்களில், தலா ஒரு யூனியனுக்கு, குறைந்தது, ஏழு வீதம், மொத்தமாக, 4,500க்கும் மேற்பட்ட குறுவள மையங்கள் உள்ளன. ஒவ்வொரு குறுவள மையமும், 10 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உள்ளடக்கி உள்ளது.

Flash News:ஆசிரியர் தகுதித்தேர்வு -தமிழக அரசு மேல்முறையீடு! வழக்கு 2 வாரகாலத்துக்கு ஒத்திவைப்பு!


தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு, வெய்ட்டேஜை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களால் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் தமிழக அரசு " மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 5% மதிப்பெண் தளர்வு நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போகிறோம் என்று கூறியது.இந்த அறிவிப்பால்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்துக்கு புதிய இணை இயக்குநர்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்துக்கு புதிய இணை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த பி.ஏ. நரேஷ், பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குநராக (இடைநிலைக் கல்வி) மாற்றப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த குமார், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

 நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இவர் முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றியுள்ளார்.

இந்தியாவில் CPS தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்கள் 25% முன் பணம் எடுத்துக்கொள்ள அனுமதித்த ஆணை ( முதல் பகுதி) PFRDA வெளியீடு!!!

NMMS 2015 CUDDALORE DICTRICT RESULT & MARKS RANKS

தொடக்கக்கல்வி - இனிவரும் CRC பயிற்சி வகுப்புகளுக்கு தொடக்க/உயர்தொடக்க நிலை ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவர்களுக்கும், உதவித் தொடக்கக்கல்வி அலுவர்களுக்கும் இயக்குனர் உத்தரவு ›


தொடக்க கல்வி- NMMS 2014. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் பதிவு செய்தல் மற்றும் வங்கி கணக்கு தொடங்குதல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்



7வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியத்தை 2.86 பெருக்கி வழங்கினால் அது மிகக்குறைவு !!! 3.7 ஆல் பெருக்கி வழங்க வேண்டும் ! மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை!!!

The recommendations of the 7th Pay Commission have slowly started to make their way to the media in the form of unconfirmed news. The information that was being extensively discussed by all for more than a week now has finally made it to the websites yesterday.
It has now been confirmed that the 7th Pay Commission will submit is report to the Government next month. With the report being given a final shape, certain pieces of information have already started to hit the media. Some of the workable recommendations of the commission are out.

IGNOU- B.Ed. Prospectus for January 2016

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு: உத்தேச அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை, விரைவில் தேதி அறிவிப்பு

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை அண்மையில் வெளியிட்டது. 
அதில், ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் மட்டுமே பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.இந்த நிலையில், வருகிற 29-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 வரை பணியிட மாறுதல்கலந்தாய்வு நடத்த உத்தேச அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இந்தக் கால அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.அரசிடம் அனுமதி பெற்ற பிறகு, விரைவில் அதிகாரப்பூர்வ கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும்என்றனர்.

பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி - அரசானை எண்: 35 இன் படிமுறையான ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பணிவரன் முறை சார்ந்த விவரங்களை கோரி இயக்குனர் செயல்முறைகள்




சென்னையில் 1.70 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் இல்லை சிறப்பு முகாம்கள் நடத்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

நாடு முழுவதும் அனைவருக்கும் ஆதார் அட்டைகள் வழங்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களிடம் எத்தனை பேருக்கு ஆதார் அடையாள அட்டை எண் உள்ளது? எத்தனை பேருக்கு இல்லை? என்ற விவரங்களை உடனடியாக சேகரித்து அனுப்பும்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சென்னையில் ஜார்ஜ்டவுன், ராயபுரம், பெரியமேடு, பெரம்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், தியாகராயநகர், அடையாறு, மயிலாப்பூர் என 10 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு மாணவர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

அரசு பள்ளி ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வுக்கு கலந்தாய்வு: ஜூலை 29 முதல் ஆக.18 வரை நடத்த கல்வித்துறை ஏற்பாடு

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணையை பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரம் வெளியிட்டது.இந்த நிலையில், 
ஆசிரியர் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான உத்தேச கால அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ளார்.

CPS திட்டத்தில் உள்ளவர்கள் 25% தொகையை திரும்ப பெற்று கொள்ள வகைசெய்யும் ஆணை

தொடக்க கல்வி துறை - ALL TRANSFER APPLICATION

பி.எட்., மாணவர் சேர்க்கை விதிமுறைகள் அறிவிப்பு

இந்த ஆண்டு, பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தர வரிசை பட்டியலில், உயர் படிப்புக்கு ஏற்ற, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.கடந்த ஆண்டு வரை, பி.எட்., ஓராண்டு படிப்பாக இருந்தது. மத்திய அரசின் புதிய விதிமுறைகளின்படி, இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.


இம்மாத இறுதியில், பி.எட்., மாணவர் சேர்க்கையைத் துவங்க, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை முடிவு செய்துள்ளது. அதற்காக, புதிய விதிமுறைகளை, தமிழக கல்லுாரி கல்வி இயக்ககம் வெளியிட்டு உள்ளது. அதன் விபரம்:

இணைய சமநிலை அறிக்கை வெளியானது!

மத்திய தொலைத் தொடர்பு துறை அமைத்த குழு, இணைய சமநிலை தொடர்பான அறிக்கையை, தனது வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. இதில் இணைய சமநிலையை காக்க மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இணைய சமநிலை: இன்டர்நெட் பயன்பாட்டில் எந்தவொரு வெப்சைட்டுக்கும், அப்ளிகேஷனுக்கும் கூடுதலாக கட்டணம் இல்லாமல், அனைத்து சேவைகளையும் ஒரே கட்டணத்தில் பெறுவதே இணைய சமநிலை.

2015-16 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு உத்தேச கால அட்டவணை


பள்ளிக்கல்வி - குறுவள மைய பயிற்சி - 25.07.2015 அன்று நடைபெறவுள்ள குறுவள மைய பயிற்சியில் உயர்நிலை / மேல்நிலையில் பணிபுரியும் ஆசிரியர்கள் 100% கலந்து கொள்ள இயக்குனர் உத்தரவு


பாடத்திட்டம் இல்லாமல் எப்படி பாடம் நடத்துவது ஓவிய ஆசிரியர்கள் முதல்வர் அலுவலகத்தில் மனு


சென்னை: 'வரையறுக்கப்பட்ட பாடத்திட்டமே இல்லாத நிலையில், வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தை மட்டுமே, ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்ககம், மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டிருப்பது, ஓவிய ஆசிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், மாநில திட்ட இயக்குனரின் சுற்றறிக்கை, சமீபத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது.அதில், 'ஓவியம், தையல், இசை, கட்டடக்கலை, தோட்டக்கலை, வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தை, மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுவயது வரம்பை உயர்த்த கோரிக்கை


சென்னை :'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் 1 தேர்வு எழுதுவதற்கான, உச்ச வயது வரம்பை, 45 வயதாக உயர்த்த வேண்டும்' என, தமிழக
குரூப் 1 தேர்வர்கள் கூட்டமைப்பு, கோரிக்கை விடுத்துள்ளது.
பாதிப்பு
இது தொடர்பாக, கூட்டமைப்பு சார்பில், முதல்வருக்கு அனுப்பி உள்ள, மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள், பெரும்பாலும் தமிழ் வழியிலே, கல்வி கற்கின்றனர். இவர்கள் குரூப் 1 தேர்வு குறித்து, 30 வயது கடந்த பின்னரே, தெரிந்து கொள்கின்றனர். முதல், இரண்டு தோல்விக்கு பின்னரே, தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என, தெரிந்து கொள்கின்றனர்.இக்கால கட்டத்தில், தேர்வு எழுதுவதற்கான உச்ச வயது வரம்பை கடந்து விடுவதால், குரூப் 1 தேர்வு குறித்து எண்ண முடியாத நிலைக்கு ஆளாகின்றனர்.

TNPSC : GROUP–II (Interview Posts) - (Group-II Services) - Oral Test (Interview) Schedule & Date-Wise Candidates List and Oral Test Memorandum

கல்லூரியில் B.Ed 2 வருடம் அமுல்படுத்ததுவது தொடர்பாக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு


ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் கட்டாயப் பணி.. ஆசிரியர்களின் வயிற்றில் புளி கரைக்கும் அதிரடி அரசு உத்தரவு!


இனி ஒரே பள்ளியில் 3 கல்வியாண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது பள்ளி கல்வித்துறை. பலருக்கு விலக்கு ஆசிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைப்பதாக அமைந்துள்ளது இந்த அறிவிப்பு.
அதே நேரத்தில் பார்வையற்றவர்கள், 40 சதவீதத்துக்கும் மேல் உடல் ஊனமுள்ள மாற்றுத் திறனாளிகள், ராணுவத்தில் பணிபுரிபவரின் மனைவி, இதயம், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், புற்றுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு இந்த நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய இணையதளம் தொடங்கியது கோவை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை கோவை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதிய இணையதளம் (www.kovaischools.net) தொடங்கப்பட்டுள்ளது.

    புதிய இணையதளம் தொடங்கியது கோவை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை
 கோவை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதிய இணையதளம் (www.kovaischools.net) தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநிலம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் விவரங்கள், மாணவர்கள் - ஆசிரியர்களுக்கான நலத் திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய இணையதளம் (https:tnschools.gov.in) செயல்பட்டு வருகிறது.

தொடர் முழக்க போராட்டம் காவல் துறை 1 மணி நேரம் மட்டுமே அனுமதிஉண்ணாவிரதமாக மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பு செய்தி: ஆகஸ்டு 1 ம்தேதி சென்னையில் நடைபெறும் ஜாக்டோ தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை 1 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்க முன் வந்து உள்ளதால்  தொடர் முழக்க
ஆர்ப்பாட்டமானது  உண்ணாவிரதமாக மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிக்கல்வி - கல்வித்துறைக்கு மாணவர்களின் ஒழுக்கமற்ற செயல்களால் களங்கம் - தடுக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரைகளை வழங்க இயக்குனர் வலியுறுத்தல் - செயல்முறைகள்


தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழக செயலாளராக கார்மேகம் பொறுப்பேற்பு

தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளராக எஸ்.கார்மேகம் புதன்கிழமை பொறுப்பேற்றார். பள்ளிக் கல்வி (இடைநிலை) இணை இயக்குநராக இருந்த அவர், இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநர் அளவிலான தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழக செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குநர், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் அவர் முன்னதாக வகித்துள்ளார்.

உதவிப் பேராசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார் முதல்வர்

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (15.7.2015) தலைமைச் செயலகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள 1006 உதவிப் பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

திடீரென விதிமுறைகளை மாற்றி பணியிட மாறுதல் கலந்தாய்வில் கிடுக்கிபிடி: ஆசிரியர் சங்கங்கள் கொந்தளிப்பு


பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒளிவு மறைவற்ற பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டும். அதற்காக கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று திமுக ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது(அரசாணை 232, 13.7.15). அதில் 15 வகையான வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி


ஆசிரியர்கள், மாணவர்களைக் கையாள்வது தொடர்பாக 2 ஆயிரம் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஜூலை 13 முதல் 17 வரையும், ஜூலை 21 முதல் 25 வரையிலும் இரண்டு கட்டங்களாக இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

பிரிட்டன்-இந்தியா கல்வி மற்றும் ஆராய்ச்சித் திட்டம், தேசிய கல்வி திட்டமிடல், நிர்வாகப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் போது, பள்ளி மேலாண்மை, ஆசிரியர்களின் திறன்களை எவ்வாறு மேம்படுத்துவது, ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்களை எவ்வாறு திருத்துவது உள்பட பல்வேறு பயிற்சிகள் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

The Main Points of the Transfer Counselling Norms:

1.  Three years band:
The teachers who were appointed before 01.06.2012 in a school and completing three full academic years only eligible to this counselling.
2) Deployment: After the Deployment counselling only General Counselling and mutual transfer counselling should be done.
3) Mutual:
Mutual Transfer are allowed. But these mutual candidates are not allowed to the again and again in previous school.

4) Exception:
As usual some exceptional are there in the three years band. Like Blind, Exserviceman, Widow quota.
5) No Unit Transfer:
 No unit transfer for DEE, ADW,Welfare schools to DSE.  Also no unit transfer to Municipal schools to DSE schools.
6) Expect Date:
The proper announcement for transfer counselling date published in the News Papers & Media by DEE & DSE Directors soon.
We will expect transfer counselling date may be 26.7.2015 & 27.7.2015.

கேரள மாநில அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு 10வது சம்பள கமிஷன் அறிக்கை அரசு ஒப்படைக்கப்பட்டது; கல்வித்துறை சார்பான சம்பள கட்டமைப்பு பக்கம் 149 முதல் குறிப்பிடப்பட்டுள்ளது

பொது மாறுதல் விண்ணப்பம்.................

தொடக்கக்கல்வி - சார்நிலைபணி - உதவி/கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மீண்டும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக மீளவும் மாறுதல் கலந்தாய்வு -இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்

வேடசந்தூர் அருகே மாணவர்களே இல்லாமல் பள்ளிக்கூடம்

வேடசந்தூர் அருகே மாணவர்களே இல்லாமல் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர், சத்துணவு ஊழியர்கள் பணிக்கு வந்து செல்லும் அவல நிலை நீடிக்கிறது.
மாணவர்களே இல்லாத பள்ளி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியத்தில் 70 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளும், 19 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளும், 13 உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளும், 2 உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. அரசு பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் கடிதம் பல்வேறு பாடங்களில் கூடுதலாக இளங்கலைப் பட்டங்கள் பெற்றாலும் பி.எட் படிப்பு ஒன்றே எல்லாவற்றிற்கும் போதுமானது

              ஓ.மு.எண் 100723/சி2/இ1/2012 நாள்-09/01/2013 ன் படி ஒருவர் ஏற்கனவே பெற்ற பி.எட் படிப்பானது தற்போது இளங்கலையில் வேறுபாடங்களை  (மூன்று ஆண்டுகள் படிப்பாக) பயின்றவருக்கு ஏற்கனவே பயின்ற மேற்படி பி.எட் படிப்பு போதுமானதாகும். இது குறித்து மேலும் தகவல் பெற விரும்பினால்

உறுப்பினர் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகவல் பெற்றுக்கொள்ளலாம

வகுப்பறையிலேயே கிளாசில் மது - போதையில் பிளஸ்-2 மாணவர்கள்.

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளி கூட பிளஸ் 2 மாணவர்கள்
பள்ளியிலேயே மது அருந்திய விஷயம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 2500 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.  இந்த பள்ளியில் பிளஸ் 2 முதல் குரூப் எடுத்து படிக்கும் 3 மாணவர்கள் நேற்று மதிய இடைவேளையின் போது வெளியே சென்று மது அருந்தினார்கள். பின்னர் போதையில் வகுப்பறைக்கு வந்தனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு போதை தலைக்கு ஏறியது. திடீர் என ஒரு மாணவன் வகுப்பறையில் வாந்தி எடுத்தார்.

ஆர்.டி.ஐ பதில்களை இணையத்தில் வெளியிட மத்திய அரசு உத்தரவு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை இணையதளத்தில் வெளியிடுமாறு மத்திய அரசுத் துறைகளுக்கு பணியாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஒரே மாதிரியான கேள்விகளைக் கேட்டு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதைத் தடுக்கும் விதத்தில் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகல்வி - 2010/2011 ஆண்டில் ஆசிரியர் தேர்வுவாரியத்தால் நியமிக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குனர்கள் முறையான நியமனமாக முறைபடுத்தி பணிவரன்முறை ஆணை வெளியீடு

அரசு பள்ளிகளில் கட்டாய சிறப்பு வகுப்பு

கல்வியாண்டு துவக்கத்திலேயே, ௧௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, அரசு பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளும், தேர்வுகளும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 6, 7, 8ம் வகுப்பு ஆசிரியர்களை விட, தினமும் மூன்று மணி நேரம் கூடுதலாகவும், சனிக்கிழமை முழுவதும், பள்ளியில் செலவிட வேண்டியுள்ளதால், ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளது.


முழு வேலை நேரம்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் என, பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஊதிய உயர்வு கோரிக்கைக்கு அரசு தடை:ஊழியர்கள் அதிர்ச்சி

ஊதிய மாற்றம் செயல்படுத்தும் வரை ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை ஊழியர்கள் வைக்க வேண்டாம் என அரசு கேட்டு கொண்டுள்ளது.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2006 ஜன.,1 முதல் 7 வது ஊதிய மாற்றம் அமல்படுத்தப்பட்டது. இதில் பல முரண்பாடுகள் இருப்பதாக கூறி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அதிலும் சில முரண்பாடுகள் இருப்பதாக கூறியதை அடுத்து, 3 நபர் குழு அமைக்கப்பட்டு 89 அரசாணைகள் வெளியிடப்பட்டன.

பிளஸ் 2 தேர்ச்சியை பள்ளியிலேயே பதிவு செய்யலாம்

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவை செய்து கொள்ளலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10-ம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளில் எடுத்து வரவேண்டும்.

10-ம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவு செய்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவெண் தெரியவில்லையெனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ள வேண்டும். ஜூலை 15 முதல் ஜூலை 29 வரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து பொது நல வழக்கு; இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் திரு. எங்கெல்ஸ் அவர்களால் தொடரப்பட்ட பொது நல வழக்கு(வழக்கு எண்.11987 / 2015) நாளை நீதிமன்ற எண்.9ல் விசாரணைக்கு வரவுள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பிடித்தம் செய்த தொகை வழங்கவும், ஓய்வூதியம் வழங்க உத்தரவிடக் கோரப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்த தொகையை PFRDAவிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பள்ளிகளிலும் ஆதார் முகாம் -ஆதார் எண் இருந்தால்தான் ‘ஸ்காலர்ஷிப்

பள்ளி மாணவர்களிடம் சேகரிக்கப்பட்ட ஆதார் எண் விவரங்களை பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்துக்கு சிஇஓ அலுவலகங்கள் மூலம் இன்று அனுப்பி வைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி ஒரு புறம் தீவிரமாக நடந்து வந்தாலும், மறுபுறம் ஆதார் எடுக்காதவர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. பள்ளியிலிருந்தே இப்பணியை துவங்க திட்டமிட்டுள்ள அரசு, பள்ளிகளில் உள்ள மாணவர்கள் எத்தனை பேருக்கு ஆதார் அடையாள அட்டை உள்ளது என்பது தொடர்பாக கணக்கெடுக்கவும், ஆதார் எண் இல்லாதவர்களை விரைவில் ஆதார் எண் எடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளன.
அதன்படி இனி வரும் காலங்களில் ஆதார் எண் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே ஸ்காலர்ஷிப் (கல்வி உதவித்தொகை) வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரியவருகிறது.

பி.எட்., தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை : பி.எட்., தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, மணிவண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில் நடந்த, பி.எட்., படிப்புக்கான தேர்வு முடிவுகள், பல்கலை இணையதளமான, www.tnteu.inல், இன்று வெளியாகும்.
மதிப்பெண் பட்டியல், தற்காலிக சான்றிதழ் ஜூலை, 30ம் தேதிக்குப் பின், கல்லுாரிகள் வழியே வழங்கப்படும். மறுகூட்டல், மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் பெற, தனித்தனி விண்ணப்பங்களை, ஜூலை, 24ம் தேதிக்குள், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.விண்ணப்பப் படிவங்களை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'ஹெல்மெட்' வதந்தி: போலீசார் எச்சரிக்கை

சென்னை:'ஹெல்மெட்' அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என, முதல்வர் அறிவித்து இருப்பதாக வதந்தி பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரித்து உள்ளனர்.'இருசக்கர வாகன ஓட்டிகள், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்' என்பது, கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், விஷமிகள் சிலர், 'ஹெல்மெட் அணிவது, அவரவரின் தனிப்பட்ட விருப்பம். உயிரின் மேல், விருப்பம் உள்ளவர்கள் அணிந்து கொள்ளட்டும்.

பிளஸ் 1 மாணவர்களுக்குகிடைத்தது 'பொருளியல்''தினமலர்' செய்தி எதிரொலி

மதுரை:வழங்கப்படாமல் இருந்த பொருளியல் புத்தகங்கள் 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் நேற்று ஒரேநாளில் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன.தி.மு.க., ஆட்சியில் தயாரிக்கப்பட்ட பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்ட புத்தகங்களில் இடம் பெற்ற முகவுரையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி, அமைச்சர் தங்கம் தென்னரசு பெயர் இடம் பெற்றதால் சர்சையானது. இதனால் மாணவர்களுக்கு இந்தாண்டு வழங்கப்பட்ட புத்தகங்கள் திரும்ப பெறப்பட்டு அப்பக்கம் நீக்கப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டன.

கல்வித்துறை சிறப்பு அரசாணை ஆசிரியர் கலந்தாய்விற்கு முட்டுக்கட்டையா: ஆசிரியர்கள் அதிருப்தி

சிவகங்கை:கல்வித்துறை செயலரின் சிறப்பு அரசாணையால் ஆசிரியருக்கான பொது பணி மாறுதல் கலந்தாய்வில் தாமதம் ஏற்படுகிறது என ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கும்.
கோடை விடுமுறையில் நடத்தினால் மாறுதல் பெறுவோர் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தல், வீடு மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும் என்ற நோக்கில் மே மாதத்தை பள்ளிக்கல்வித்துறை தேர்ந்தெடுத்தது.2015--16ம் கல்வியாண்டுக்கான பதவி உயர்வு, பணி மாறுதல் கலந்தாய்வு இதுவரை நடக்கவில்லை. சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்து, கலந்தாய்வு நடக்கலாம் என, எதிர்பார்த்தவர்களின் நம்பிக்கை வீணானது. தேர்தல் முடிந்தும் அதற்கான அறிகுறி ஏதுமில்லை..

இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடத்துக்கான பதிவு மூப்பு விவரங்களை சரிபார்க்க வாய்ப்பு

இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடத்துக்கான பதிவு மூப்பு விவரங்களை சரி பார்த்துக்கொள்ளலாம் என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் வெ.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடத்துக்கான பட்டியல் வேலைவாய்ப்புத் துறை மூலம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிக்கு, பத்தாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு டிப்ளமோ படிப்பின் தொழிற்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.1.2015 ஆம் தேதி படி ஓசி பிரிவினருக்கு 35 வயதிற்குள்ளும், பிசி,எம்பிசி,பிசிஎம் பிரிவினருக்கு 37 வயதிற்குள்ளும், எஸ்சி,எஸ்எஸ்டி பிரிவினருக்கு 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். இதற்கு அரசு விதிமுறைப்படி உச்ச வயது வரம்பு தளர்வு உண்டு. இதற்கான பதிவு மூப்பு தேதி விவரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

கல்வி உதவித் தொகை நடைமுறைகளை எளிதாக்க மாணவர்களின் ஆதார் விவரம் சேகரிப்பு

மாநிலம் முழுவதிலும் அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் ஆதார் அடையாள அட்டை உள்ளவர்கள் விவரங்கள் சேகரிக்கும் பணியில் கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது. வரும் காலங்களில் கல்வி உதவித் தொகை உள்ளிட்டவைகளை இதன் மூலம் அளிப்பதற்காக பட்டியல் திரட்டப்படுவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாடு முழுவதிலும் 5 வயதுக்கு மேல்பட்ட ஆண், பெண் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் 32 மாவட்டங்களில் சுமார் 80 சதம் பேருக்கு ஆதார் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்கள் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு நிதி

மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு பணியை உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதி மேற்கொள்ள வேண்டும் என்பது முக்கிய நோக்கம்.இதன்படி மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), நிர்மல் பாரத்
மற்றும் சி.எஸ்.ஆர்., (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி) முறையில் ஏர்போர்ட் மற்றும் என்.எல்.சி., நிர்வாகங்கள் பங்களிப்பிலும் அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு புதிய கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன.இந்நிலையில் அரசு பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாததால் கழிப்பறை பராமரிப்பு கேள்விக்குறியானது. 

'சர்ச்சையான' பொருளியல் புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை: தேர்வு அறிவிப்பால் அதிர்ச்சி

பிளஸ் 1 பொருளியல் புத்தக முகவுரை  நீக்கப்பட்ட புதிய புத்தகங்கள் மாணவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் அதற்குள் முதல் இடைத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த 2004ல் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி பிளஸ் 1, பிளஸ் 2 பாடப்புத்தகம் 2008ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டன. 

ஆனால் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொருளியல் புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஜூலை 24ல் இடைத்தேர்வு துவங்குவதாக கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால் எவ்வாறு தேர்வு எழுதுவது என்ற குழப்பத்தில் மாணவர்கள் உள்ளனர்.