Breaking News

வருமானவரிச் சட்ட மாறுதல்கள் !

வரும் *01-04-2017* முதல்வருமான வரிச் சட்டத்தின் கீழ்சட்டப்பிரிவு 269STன் படிநடைமுறைக்கு வரவுள்ள கட்டுப்பாடுகள் 

குறித்த விளக்கம் கீழே

*சட்டவிதி 269ST(a):*
ரூ.3 லட்சம் (அதற்கும் மேல்ஒரு நாளில்ஒரே நபரிடமிருந்துஒருவிற்பனைப் பட்டியலுக்கோ (பல பட்டியல்களுக்கோ ரொக்கமாகப்பணம் பெற்றால்மேற்படி விதியின் படி தண்டனைக்குரியபரிவர்த்தனை ஆகும்.
*உதாரணம்:*
ஒரு வணிகர் (அதாவது *நீங்கள்*), ஒரு நாளில்ஒரே நபரிடமிருந்து,ஒரு விற்பனைப் பட்டியலுக்கோ (sale bill) அல்லது பல விற்பனைப்பட்டியல்களுக்காகவோரூ.3,25,000/- ரொக்கமாகப் பெற்றால்,தண்டம் (penalty) கட்டவேண்டும்.
*சட்டவிதி 269ST(b):*
ரூ.3 லட்சம் (அதற்கும் மேல்,   ஒரு  வி்ற்பனைப் பட்டியலுக்காக,ஒரே நபரிடமிருந்துபல தவணைகளாகபல நாட்களில்ரொக்கமாகப்பணம் பெற்றால்மேற்படி விதியின் படி தண்டனைக்குரியபரிவர்த்தனை ஆகும்.
*உதாரணம்:*
ஒரு வணிகர் (அதாவது *நீங்கள்*), ஒருவருக்கு ரூ.4,00,000/- க்கு ஒரேவிற்பனைப் பட்டியலாகப் போட்டுஒரு நாளுக்கு அதிகபட்சம்ரூ.10,000/- வீதம் பல தேதிகளில்ரூ.4,00,000/-  ரொக்கமாகப்பெற்றால்தண்டம் (penalty) கட்டவேண்டும்.
*சட்டவிதி 269ST(c):*
ரூ.3 லட்சம் (அதற்கும் மேல்பல பிரிவுகளில் பல்வேறுவகையிலான தொடர் விற்பனைப் பட்டியல்களுக்குஒரேநபரிடமிருந்துஒரே தவணையாகவோ அல்லது பலதவணைகளாகவோரொக்கமாகப் பணம் பெற்றால்மேற்படி விதியின்படி தண்டனைக்குரிய பரிவர்த்தனை ஆகும்.
*உதாரணம்:*
ஒரு வணிகர் (அதாவது *நீங்கள்*), ஒரு நபருக்குரூ.1,50,000/- ற்குசேலை/துணி விற்பனைப் பட்டியலாகவும்ரூ.1,30,000/-க்கு தறிக்கூலிபட்டியலாகவும்ரூ.1,20,000/- க்கு துணியில் கல் பதித்த கூலிப் பட்டியலாகவும் போட்டுமொத்தமாகவோ அல்லது பலதவணைகளாகவோ ரூ.4,00,000/- ஐயும் ரொக்கமாகப் பெற்றால்,தண்டம் (penalty) கட்டவேண்டும்.
இது அனைத்து வணிகப் பிரிவுகளுக்கும் பொருந்தும்.
*மிகமுக்கியகுறிப்பு*:
மேற்படி விதியின்படிகட்டவேண்டிய தண்டத்தொகை எவ்வளவுதெரியுமா…?
100% (நூறு சதவிகிதம்)

அதாவதுநீங்கள் ரொக்கமாகப் பெற்ற தொகை *முழுவதையும்*அப்படியே அரசுக்கு செலுத்திவிட வேண்டும்.