Breaking News

TET - அரிய ஆலோசனைகள்; அதிக மதிப்பெண் பெறுவது நிச்சயம்!


மதுரையில் நடந்த தினமலர் டி..டி., ஆலோசனை முகாமில்
வல்லுனர்கள் தெரிவித்த அரிய ஆலோசனைகளால்அதிக மதிப்பெண்பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’ என நிகழ்ச்சியில்பங்கேற்றோர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்இந்நிகழ்ச்சி குறித்துஅவர்கள் கூறியதாவது:



 
ரேணுகாகள்ளிக்குடிடி..டி., தாள் 1 தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கிறேன்இதற்கு முன் 2012, 2013ல் நடந்த தேர்வுகளில்பங்கேற்று, 74 மற்றும் 81 மதிப்பெண் பெற்றேன்.

இம்முகாமில் பங்கேற்ற பின் தான், ’எவ்வாறு ஒரு போட்டித் தேர்வுக்குதயாராக வேண்டும்’ என தெரிந்ததுபாடங்கள் வாரியாக என்ன வகைவினாக்கள் இடம் பெறும்படித்த விஷயங்களை எளிதாக எவ்வாறுமனதில் நிறுத்தி வைக்கலாம் என்ற உளவியல் ரீதியானஆலோசனைகளும் கிடைத்தது.

குறிப்பாக ஆறு முதல் பிளஸ் 2 வரை புத்தகங்களில் பாடங்களைவரிசைப்படுத்தி படிக்க வேண்டும் என்பது பயனுள்ள தகவல்தினமலர்நாளிதழுக்கு நன்றி.

கந்த அஞ்சுகம்அண்ணாநகர்தாள்- 2 தேர்வு எழுதவுள்ளேன்.ஏற்கனவே நடந்த தேர்வில் 99 மதிப்பெண் பெற்றுள்ளேன்ஆனாலும்,அதிகம் மதிப்பெண் பெற முயற்சிக்கிறேன்அதற்காகதினமலர்நடத்திய இம்முகாம் பயனுள்ளதாக இருந்தது.

2012, 2013ம் ஆண்டு எழுதிய தேர்வில் என்ன தவறுகள் செய்தோம்என தெரிந்ததுகுறிப்பாக பொது அறிவுஉளவியல் பாடங்களைஎவ்வாறு முறைப்படுத்தி படிக்க வேண்டும் என்ற ஆலோசனைபயனுள்ள தகவல்.

மேலும்படித்த விஷயத்தை எவ்வாறு மனதில் நிறுத்த வேண்டும்என்றும் ஒப்பீடு செய்து படிக்க வேண்டும் என்ற ஆலோசனையும் வரும்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும்.அதிக மதிப்பெண் பெறுவேன்.

அம்சப்பிரியாடி.வி.எஸ்., நகர்கணிதம் இளங்கலை முடித்துபி.எட்.,இரண்டாம் ஆண்டு படிக்கிறேன்முதன் முறையாக இத்தேர்வு எழுதஉள்ளேன்தேர்வை எவ்வாறு எழுத வேண்டும்எந்த பாடங்களில்இருந்து வினாக்கள் கேட்கப்படும் என ஒரு திசையும் தெரியாமல் தான்இம்முகாமில் பங்கேற்றேன்.

வழக்கமாகதமிழ் பாடம் எனக்கு சவாலாக இருக்கும்அப்பாடத்தைஎவ்வாறு எளிதில் படிக்கலாம் என புரியும் வகையில் நிகழ்ச்சியில்ஆலோசனை வழங்கப்பட்டதுஅதேபோல் உளவியல் மற்றும் பொதுஅறிவு பகுதியை எவ்வாறு பகுத்துபிரித்து படிக்க வேண்டும் என்றஆலோசனையும் அளப்பறியதுதேர்வு பயம் நீங்கியது.

புவனேஷ்வரிஜெய்ஹிந்த்புரம்இதுவரை பல போட்டித் தேர்வுகள்எழுதியுள்ளேன்ஆனால்அதற்கெல்லாம் பாடங்களை மொத்தம்மொத்தமாக படித்தேன்ஆனால்பாடங்களை எவ்வாறு திட்டமிட்டுபடித்தால் எளிதில் தேர்வு எழுதலாம் என்பது தெரிந்தது.

இதன் மூலம் இதற்கு முன் எழுதிய போட்டித் தேர்வுகளில் என்னதவறுகள் செய்தேன் என்பதை உணர்ந்தேன்அவற்றை இனிமேல்திருத்திக்கொள்ள இந்த முகாம் வாய்ப்பாக அமைந்ததுபல ஆயிரம்ரூபாய் செலவிட்டு தனியார் நிறுவனங்களில் ’கோச்சிங் கிளாஸ்சென்றாலும்இதுபோன்ற ஆலோசனைகள் கிடைத்திருக்காது.

மகேஸ்வரிவிளாங்குடிதாள்- 1 தேர்வுக்காக தயாராகி வருகிறேன். 2012, 2013ல் இத்தேர்வு எழுதி 82 மதிப்பெண் பெற்று தகுதிபெற்றேன்ஆனாலும்அதிக மதிப்பெண் பெற்று ஆசிரியர் ஆகிவிடவேண்டும் என்பதற்காக இந்தாண்டும் இத்தேர்வுக்கு தயாராகிறேன்.


எப்படி படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்படித்ததை எவ்வாறுநினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகள்பயனுள்ளதாக இருந்தனதேர்வில் அதிக மதிப்பெண் பெறுவேன்என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதுஇவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.