Breaking News

'TET' தேர்வுக்கு குறைந்த அவகாசம்:தேர்ச்சி பெறாவிட்டால் பணி பறிபோகும் - ஆசிரியர்கள் கலக்கம்


ஆசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும், 'டெட்தேர்வுஅறிவிப்பால்அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்
கலக்கத்தில் உள்ளனர்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால்அவர்களின் பணிபறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

  மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2010 ஆக., 23க்கு பின், 'டெட்தேர்வில் தேர்ச்சி பெற்றால்மட்டுமேஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட வேண்டும்எனஉத்தரவிடப்பட்டது.
அரசுதனியார் பள்ளி ஆசிரியர்களும்டெட் தேர்வில் தேர்ச்சிபெற்றால் மட்டுமேஅவர்களுக்கு மத்திய அரசின் மானிய உதவிகிடைக்கும் எனமத்திய அரசு அறிவித்தது.
இதன்படி, 2016 நவம்பருக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் எனஅனைத்து அரசு உதவி பெறும் மற்றும் தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டதுஆனால்வழக்குகாரணமாகடெட் தேர்வு தள்ளிப்போனது.
இந்நிலையில்பிரச்னைகள் முடிவுக்கு வந்துஏப்ரலில் டெட்தேர்வு நடைபெற உள்ளது.

இதில்தேர்ச்சி பெற்றால் மட்டுமேஅரசு உதவி பெறும்பள்ளிகளில்ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில்நீடிக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால்தேர்வுக்கான அவகாசம் மிகவும் குறைவாக உள்ளதால்,தேர்வில் தேர்ச்சி அடைய முடியுமா என, 3,000க்கும் மேற்பட்டஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.