மத்திய அரசுக்குத் தேவைப்படும் பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி., எனப்படும் தேர்வாணையம் ஆண்டு தோறும் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது எம்.டி.எஸ்., (மல்டி டாஸ்கிங்) எனப்படும் பல்செயல் உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள ஆயிரக்கணக்கான காலியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.