Breaking News

உடற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வுபெற புதிய வாய்ப்பு கணக்கு தேர்வில் தேர்ச்சி பெறத்தேவையில்லை

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்உடற்கல்வி ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்கள் உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வு பெறுவதற்கு இதுவரை 

‘அக்கவுண்ட் டெஸ்ட் பார் சப்-ஆடினேட் ஆபிசர்’ என்ற கணக்கு தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். தேர்வில் தேர்ச்சி பெறாமலேயே பதவி உயர்வு வழங்கவேண்டும் என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா ஒரு அரசாணை பிறப்பித்துள்ளார். அதில் கணக்கு தேர்வில் தேர்ச்சி பெறாமலேயே உடற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வு பெறுவார்கள். 

இந்த அரசாணை கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.