Breaking News

80,000 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: அருண் ஜேட்லி

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்த 

நிதியமைச்சர் அருண் ஜேட்லி மோடி அரசு ஐம்பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
நாடு முழுவதும் 80,000 உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்த திட்டமும், அதற்காகஇந்தியா முழுவதும் சுமார் 80,000 உயர்நிலை பள்ளிகளை தேர்ந்தெடுத்து தரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ஏழை மாணவர்களின் கல்வியில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.மேலும் மத்திய கல்வித் துறையின் சார்பில் கர்நாடகாவில் ஐ.ஐ.டி. அமைக்கப்படும். ஜம்மு-காஷ்மீர், ஆந்திரப் பிரதேசத்தில் ஐ.ஐ.எம் அமைக்கப்படும்.அருணாச்சலப் பிரதேசத்தில் (Centre for Film Production and Animation ) திரைப்படத் தயாரிப்பு, அனிமேஷன் சார்ந்த கல்வி மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளர்.