Breaking News

பட்டதாரி ஆசிரியர்கள் அணி திரண்டு வர தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அழைப்பு


மார்ச் 1 அன்று திருச்சி மாபெறும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்திற்கும் மற்றும் மார்ச் 8 அன்று அனைத்து ஆசிரியர் சங்கங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கும் நமது பட்டதாரி ஆசிரியர்கள் அணி திரண்டு வர தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அழைப்பு

இது குறித்து  

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் 

பொதுச்செயலாளர் திரு.பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது 

 நமது  TNGTF திருச்சியில் மார்ச் 1 ல்  நடத்தும்  மாநில அளவிலான கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் போராட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர்களும் , ஒன்றிய பொறுப்பாளர்களும் ஆயத்த கூட்டங்கள் நடத்தி  உண்ணாவிரதம் போராட்டத்திற்கு அலைகடலென பட்டதாரி ஆசிரியர்களை கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்றும் , அதுபோல

மார்ச் 8 ல் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் நடத்தும் மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்திற்கு  ஆயத்த கூட்டத்திற்கு அழைக்கும் போது மாவட்ட ஆயத்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்களும் ,  ஒன்றிய ஆயத்த கூட்டத்திற்கு ஓன்றிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர்களை அலைகடலென திரள செய்து  உண்ணாவிரதம் போராட்டத்தினையும் மற்றும் ஆர்ப்பாட்டத்தினையும் வெற்றி அடைய செய்ய வேண்டும் எனவும்  கூறியுள்ளார்.


கோரிக்கையை வென்றெடுக்க திரண்டு வாரீர்!!