Breaking News

தமிழகத்தில் 1,200 அரசுப்பள்ளிகள் மூடல்?


தமிழகத்தில், 20க்கும் குறைவாகமாணவர்கள் படிக்கும், 1,200
தொடக்கப்பள்ளிகள் மூட திட்ட மிடப்பட்டுள்ளதாகபுகார்எழுந்துள்ளது.தமிழகத்தில், 36 ஆயிரம் அரசுஅரசு உதவிபெறும்தொடக்கநடுநிலைப்பள்ளிகள் உள்ளன.
இதில், 19 ஆயிரம் பள்ளிகளில்இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரியதனியார்பள்ளிகளின் ஆதிக்கமே காரணம் எனகல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.கட்டாய கல்வி உரிமை சட்டப்படிஒரு கி.மீ.,இடைவெளிக்குள்தொடக்கப்பள்ளிகள், 3 கி.மீ., இடைவெளிக்குள்நடுநிலைப்பள்ளிகள் புதிதாக துவங்க கூடாதுஆனால்புற்றீசல் போல,அருகருகே தனியார் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளனஇதனால்அரசுபள்ளிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கை சரிந்தது.இதை காரணம்காட்டிஅரசுப்பள்ளிகளுக்கு மூடுவிழா காணதொடக்க கல்வித்துறைதிட்டமிட்டுள்ளதுநடப்பு கல்வியாண்டு துவக்கத்தில்பத்துக்கும்குறைவாகமாணவர்கள் படிக்கும், 1,200 பள்ளிகளின்பட்டியல் தயார்செய்யப்பட்டதுஇப்பள்ளிகளுக்குஅடுத்த கல்வியாண்டில்மாணவர்சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாகஉத்தரவு பிறப்பிக்காததால்,பள்ளிகளை மூடமுடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமையாசிரியர்கள்கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மோசஸ்கூறுகையில்,''நடப்பு கல்வியாண்டில்மாணவர் சேர்க்கை அதிகரிப்பதுதொடர்பாகபள்ளிகளுக்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.இடைத்தேர்தல்உள்ளாட்சி தேர்தல் பணிகளில்அதிகாரிகள் கவனம்செலுத்துவதால்கல்விப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.அடுத்தகல்வியாண்டில்மாணவர் சேர்க்கை சரிந்தால்சத்தமின்றி 1,200 பள்ளிகள் மூடப்படலாம்,'' என்றார்.

No automatic alt text available.