Breaking News

தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு ஏப்.10ல் தொடக்கம்


அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அனைத்துமாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள
சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவதுபள்ளி செல்லாஇடைநின்றகுழந்தைகள் தொடர்ந்து 30 வேலை நாட்களில் எவ்விதமுன்னறிவிப்பின்றி ஒரு குழந்தை பள்ளிக்கு வராமல் இருந்தால்அக்குழந்தையை இடைநின்ற குழந்தையாக கருத வேண்டும்.

பள்ளியே செல்லா குழந்தைகள்எட்டாம் வகுப்பு முடிக்காமல் இடைநிற்பவர்கள் கண்டறியப்பட வேண்டும்மாவட்டத்திலுள்ள அனைத்துஒன்றியங்களிலும் எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல் வீடுவாரியாக கணக்கெடுப்பு பணி நடைபெற வேண்டும். 18வயதுக்குட்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளி மாணவர்களையும்கண்டறிய வேண்டும்வகுப்பு மாணவர்களிடம் கருத்துகேட்பு நடத்திஇடைநின்ற குழந்தைகள் உள்ளனரா என்று கேட்டறிதல் வேண்டும்.


கடந்த ஜூன் முதல் இந்நாள் வரை 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ளமாணவர்களின் வருகைப் பதிவேட்டை மாதவாரியாக சம்மந்தப்பட்டபள்ளியின் ஆசிரியர் பயிற்றுநர் ஆய்வு செய்ய வேண்டும்இவ்வாறுஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.