Breaking News

பள்ளிகளில் உபரி பணியிடம்திருப்பி ஒப்படைக்க உத்தரவு


அரசு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத உபரி
பணியிடங்களை திருப்பி ஒப்படைக்க பள்ளிக் கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர்களின்எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள்நிர்ணயிக்கப்படுகின்றனஅதன்படி 2016 ஆக., ல் அரசு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டன.

இதில் உபரி ஆசிரியர்களாக கணக்கிடப்பட்டோர் வேறு பள்ளிகளுக்குஇடமாறுதல் செய்யப்பட்டனர்ஆனால் ஆசிரியர் இல்லாத உபரிபணியிடங்கள் அப்படியே இருந்தன.


தற்போது அந்த பணியிடங்களை காலியிடங்களாக காட்டிஆசிரியர்களை நியமிக்கக்கூடாதுஅப்பணியிடங்களை பள்ளிக் கல்விஇயக்குனரின் பொதுத் தொகுப்பில் ஒப்படைக்க வேண்டும்அதனைபள்ளி அளவை பதிவேட்டில் (ஸ்கேல் ரிஜிஸ்டர்பதிவு செய்யவேண்டும் எனபள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன்உத்தரவிட்டுள்ளார்.