Breaking News

டெட்' தேர்ச்சி பெறாதவர்களை பள்ளிகளில் நியமிக்க தடை


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்தேர்வு முடிக்காதவர்களை,தனியார் பள்ளிகளில் நியமனம் செய்யதமிழக பள்ளி
கல்வித்துறை தடை விதித்துள்ளது.மத்திய அரசின் கட்டாயகல்வி உரிமை சட்டப்படிதமிழகத்தில்அனைத்துபள்ளிகளிலும்ஆசிரியர் பணி நியமனத்துக்கு, 2011 முதல், 'டெட்தேர்வு கட்டாயமானது.
ஆனால்அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், 'டெட்'தேர்வு முடிக்காதவர்கள்ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.இவர்களில்சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிகளின்ஆசிரியர்கள்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, 'டெட்'தேர்வில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர்மற்ற பள்ளிகளில், 'டெட்தேர்வு முடிக்காதோருக்குசம்பளம் நிறுத்தப்பட்டுஉள்ளது. 'இனி டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக்கூடாதுஎனபள்ளிக்கல்வி இயக்குனரகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இதுதொடர்பாகபள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்,பிறப்பித்துள்ள உத்தரவு:தமிழக அரசு உத்தரவுப்படிஅரசுமற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும்சிறுபான்மையல்லாத பள்ளிகளில்ஆசிரியர் பணிக்கு, 'டெட்'கட்டாயம். 2012, 2013ல், 'டெட்தேர்வுகள் நடத்தப்பட்டன.ஆனாலும்பல பள்ளிகளில், 'டெட்தேர்ச்சி பெறாதவர்களை,ஆசிரியர் பணிக்கு சேர்த்துள்ளனர்இது குறித்த ஆய்வில், 159பேர், 'டெட்தேர்ச்சி இன்றிபணியில் சேர்ந்துள்ளனர்.அவர்களில், 113 பேர் வழக்கு மூலம் சம்பளம் பெறுகின்றனர்.மீதம், 43 பேருக்கு இதுவரை சம்பளம் தரவில்லை.அவர்களுக்குஅரசின் மானியம் பெற்றுசம்பளம் வழங்க,மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறதுஎதிர்காலத்தில்,சிறுபான்மை அந்தஸ்து பெறாததனியார் பள்ளிகள், 'டெட்'தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாதுஅரசுஅனுமதி பெற்றேஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.