Breaking News

ஏப்., 29, 30ல் 'டெட்' தேர்வு சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தகவல்


: ''தமிழகத்தில், ஏப்ரல், 29, 30ம் தேதிகளில், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். சட்டசபையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஸ்டாலின், நேற்று பேசும்போது, ''ஆசிரியர் தகுதி தேர்வு, மூன்று ஆண்டுகளாக நடத்தப் படவில்லை,'' என்றார். அதற்கு, பதில் அளித்த அமைச்சர், ''தமிழகத்தில், ஏப்ரல், 29, 30ம் தேதிகளில், 'டெட்' தேர்வு நடத்தப்படும்,'' என்றார்.