Breaking News

பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க “அலுவலர் குழு” ஒன்றை உடனடியாக அமைத்து உத்தரவு .அதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் உறுப்பினராக உள்ளார்

7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த 5 பேர்கொண்ட குழு அமைத்தது தமிழகஅரசு.*


7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதிய
விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழுஅமைக்கப்பட்டுள்ளதுஇதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடிபழனிசாமி அறிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றகூட்டத்தில் இது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி மு பழனிசாமிவெளியிட்ட அறிக்கையில்அரசுப் பணியாளர்கள் நலனில் மிகுந்தஅக்கறை கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 சட்டமன்றதேர்தல் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவதுஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன்தமிழக அரசுப்பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள்எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்கள்அவருடைய அறிவிப்பைசெயல்முறைபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதுஇதுகுறித்துஎனது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று இன்றுநடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்பள்ளிக் கல்விவிளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறைஅமைச்சர் கே.செங்கோட்டையன்மின்சாரம்மதுவிலக்கு மற்றும்ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பிதங்கமணி உள்ளிட்டஅமைச்சர்களும்தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜாவைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில்மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழுபரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசுஎடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும்பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கானபரிந்துரைகளை அளிக்க “அலுவலர் குழு” ஒன்றை உடனடியாகஅமைக்க உத்திரவிட்டுள்ளேன்இக்குழுவில் கீழ்கண்ட அலுவலர்கள்உறுப்பினர்களாக இருப்பர் : 
1. கூடுதல் தலைமை செயலாளர்நிதித்துறை
2. முதன்மை செயலாளர்உள்துறை
3. முதன்மை செயலாளர்பள்ளிக் கல்வித்துறை
4. செயலாளர்பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை
5. Dr. பி.உமாநாத், – உறுப்பினர் செயலாளர்.
2) இந்த “அலுவலர் குழு” மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழுபரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசுஎடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்துஅவற்றை தமிழ்நாடு அரசுஅலுவலர்கள்ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில்பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களைமாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுமேலும்இக்குழு மத்திய அரசுபரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும்திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடுஅரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவதுகுறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இக்குழுஇதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ளஉயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரியபரிந்துரைகளை வழங்கும்.
3) அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள்இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்ததங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும்அவற்றை உரியவாறுஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4) இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள்அதாவது30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்றுதெரிவித்துள்ளார்.