Breaking News

திட்டமிட்டபடி அக்டோபர் 8ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுததம் நடைபெறும்; இன்றைய ஜாக்டோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு


இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக கட்டடத்தில் சுழற்சிமுறை தலைமையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் சார்பில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளர்(பொறுப்பு) திரு. செல்வராஜ் மற்றும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி சங்கங்களின் சார்பில் திரு.இளம்பருதி ஆகியோர் தலைமையேற்று நடத்தினர். 

அக்டோபர் 8ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துவது சார்பாக விவாதிக்கப்பட்டு இறுதியாக திட்டமிட்டப்படி அக்டோபர் 8ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்த ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

தகவல் : திரு.க.சாந்தகுமார், தலைமை நிலைய செயலாளர்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி