Breaking News

தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை (பயிற்றுநர்களை) பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் உடற்கல்வி,
ஓவியம்கணினிதோட்டக்கலைஇசைதையல்வாழ்வியல்திறன்,கட்டிடவியல் உள்ளிட்ட பாடங்களை 6 முதல் 8 வகுப்புமாணவர்களுக்கு பகுதிநேரமாக கற்பிக்க 2012-ஆம் ஆண்டு ரூ.5000/-தொகுப்பூதியத்தில் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் ஒப்பந்தஅடிப்படையில் நியமிக்கப்பட்டனர்வாரத்திற்கு 3 அரைநாள்கள் வீதம்,ஒரு மாதத்தில் 12 அரைநாள்கள் பணியாற்ற பணிக்கப்பட்டனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் அனைத்து வகைப் பணிப்பிரிவினருக்கும் ஊதிய உயர்வு வழங்கியபோதுமுதல் முறையாகபகுதிநேர ஆசிரியர்களுக்கும் (2014 ஏப்ரல் முதல்ரூ.2000/- ஊதியம்உயர்த்தப்பட்டு ரூ.7000/- வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே ஊதிய உயர்வுவழங்கப்பட்டதுபண்டிகை கால ஊக்கத்தொகைபணியின்போதுஉயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு ஆகியவை வழங்கப்படவில்லைபணிஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் மறுக்கப்பட்டுவருகிறது.
மகளிர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மகப்பேறு கால விடுப்புஅனுமதிக்கப்படுவதில்லைபணி நியமனம் மற்றும் பணிநிரவலின்போது தொலைதூரப் பள்ளிகளுக்கு பணி ஒதுக்கீடுவழங்கப்பட்டவர்களுக்கு இதுவரை அருகிலுள்ள பள்ளிகளில்பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என பகுதிநேர ஆசிரியர்கள்தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநிலஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது:
14வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில்அப்போதையமுதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 16549 பகுதிநேரஆசிரியர்களுக்கும் ஓராண்டுக்கு 12 மாதங்களுக்கான ஊதியத்தைக்கணக்கிட்டு அறிவித்ததை அமுல்படுத்த வேண்டும். 2012ஆம் ஆண்டுமுதல் இதுவரை ஒவ்வொரு வருடமும் 11 மாதங்களுக்கு மட்டுமேஊதியம் வழங்கப்படுகிறதுகடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளமே மாதங்களின் தொகுப்பூதியத் தொகையான ரூ.51 கோடியே 30இலட்சத்து 19 ஆயிரத்தை பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்க துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவா மாநிலத்தில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.1500,ஹரியானாவில் ரூ.10000 வீதம் வழங்கப்படுகிறதுமேலும்கேரளம்,கர்நாடகம் மாநிலங்களில் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு ஒன்றுக்கும்மேற்பட்ட பள்ளிகளில் வேலை வழங்கப்பட்டுகூடுதல் தொகுப்பூதியம்வழங்கப்படுகிறதுஎனவேஅதே நடைமுறையை தமிழகத்திலும்அமுல்படுத்த வேண்டும்பகுதிநேர பயிற்றுநர்களை காலமுறைஊதியத்தில் பணியமர்த்த ஆண்டுக்கு ரூ.400 கோடி கூடுதலாக நிதிஒதுக்கீடு செய்துஅனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
2015, 2016ஆம் ஆண்டுகளில் ஜாக்டோ அமைப்பின்போராட்டங்களின்போது பள்ளிகளை இயக்க அரசின் உத்தரவுப்படிமுழுமையாகப் பயன்படுத்தப்பட்ட 15000க்கும் மேற்பட்ட பகுதிநேரப்பயிற்றுநர்களுக்குபகுதிநேரப் பயிற்றுநர்களின் தொடர்கோரிக்கையான முழுநேரப் பணி வழங்கவில்லைமேலும் டாஸ்மாக்,ஊரக வளர்ச்சி துறை வட்டார வளர்ச்சி அலுவலக மகாத்மா காந்திதேசிய வேலை உறுதி திட்ட கணினி இயக்குபவர்களைப் போலபல்வேறு துறைகளில் உள்ள தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஆண்டுவாரியாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டுவருகிறதுஎனவேபகுதிநேரப்பயிற்றுநர்களுக்கு 2011-12ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு ஆண்டுவாரியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
சமவேலை – சம ஊதியம் என்ற தத்துவத்துக்கு உயிர் கொடுக்கவேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.ஹெகர்,எஸ்..பாப்டே ஆகியோர் பஞ்சாப் மாநில ஒப்பந்த தொழிலாளிக்குஆதரவாக வழங்கிய தீர்ப்பைமத்திய – மாநில அரசுகள்நடைமுறைப்படுத்த வேண்டும்.  ஒரே கல்வித் தகுதியில் உள்ளவர்களில்இருவேறு நிலைகளில் பணிமர்த்திஒரு பிரிவினர் அரசு சலுகைகளுடன்சிறப்பாசிரியர்களாகவும்மறு பிரிவினர் ரூ.7000 தொகுப்பூதியத்தில்மத்திய அரசின் திட்ட வேலையில்ஒப்பந்த அடிப்படையில் பகுதிநேரப்பயிற்றுநர்களாகவும் பணியாற்றி வருவதை தீர்வு காண வேண்டும்.ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றிய ஆசிரியர்பயிற்றுநர்களைபணிநிரந்தரம் செய்தது போல பகுதிநேரப்பயிற்றுநர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார் அவர்.