Breaking News

பள்ளி குழந்தைகளுக்கு விருது




பள்ளி குழந்தைகளுக்கான புதுமை படைத்தல் போட்டியை அறிவித்துள்ளது, சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்ட் இன்டஸ்டிரியல் ரிசர்ச்!
பள்ளியில் படிக்கும், 18 வயதுக்குட்பட்ட இந்திய மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவர் அல்லது குழுவாக உருவாக்கிய கண்டுபிடிப்பை மட்டும் போட்டிக்கு அனுப்ப வேண்டும். கண்டுபிடிப்பு பரிந்துரைகள் இந்தி அல்லது ஆங்கில மொழியில் 500க்கும் மேற்பட்ட வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
பரிசு: முதல் பரிசு ஒரு நபருக்கு ரூபாய் 2 லட்சம், இரண்டாம் பரிசு ஐந்து நபருக்கு தலா ரூபாய் 1 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசு 10 நபருக்கு தலா ரூபாய் 50 ஆயிரம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31
விபரங்களுக்கு:  www.csir.res.in