Breaking News

மதிப்பெண் சான்றிதழில்தவறு ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் பொறுப்பு

‘பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர் மதிப்பெண் சான்றிதழ்களில் தவறு ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,‘ என தேர்வுத் துறை துணை இணை இயக்குனர் அமுதவல்லி எச்சரித்தார்.





மாவட்டத்தில் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பொதுத் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார்.

இதில் அமுதவல்லி பேசியதாவது:

பொதுத் தேர்வில் மாணவர் பட்டியல் (நாமினல் ரோல்) தயாரித்து தேர்வுக்கு முன் அடித்தல், திருத்தல், சேர்த்தல் பணி நடக்கும். இந்தாண்டு முதல் மாணவர் பெயர்களை தலைமையாசிரியர் தன்னிச்சையாக நீக்க முடியாது. அதற்கான ’ஆப்சன்’ ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கடைசி வாய்ப்பிற்கு பின் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய முடியாது. எனவே பெயர், பிறந்த தேதி உட்பட அனைத்து விவரங்களையும் கவனமாக பதிவு செய்ய வேண்டும். அதற்கு பின்னரும் தவறு ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் லோகநாதன், ரேணுகா, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் அனந்தராமன், அதிராமசுப்பு மற்றும் 196 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்