Breaking News

பள்ளிக்கு செல்லாமல் ’பினாமி’ நியமித்த தலைமை ஆசிரியை!



மலைப்பகுதியில் உள்ள, உறைவிடப்பள்ளி தலைமையாசிரியை, பள்ளிக்கு செல்லாமல், தன்னிச்சையாக ஒருவரை நியமித்து, சம்பளம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம்வெண்ணந்துார் அடுத்தபோதமலை மலைப்பகுதியில் உள்ள கீழூரில்மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்காகஉறைவிட துவக்கப்பள்ளி செயல்படுகிறது. 
இங்கு,இரண்டு மாணவியர்ஐந்து மாணவர் எனஏழு பேர் படிக்கின்றனர். இவர்களுக்குஇப்பள்ளியிலேயே தங்குவதற்கு வசதியும்உணவும் கொடுக்க வேண்டும். உறைவிடப்பள்ளி என்பதால்விடுதியின் காப்பாளராக பள்ளி தலைமை ஆசிரியரே பொறுப்பு வகிப்பார்.
ஆனால்பள்ளியின் தலைமை ஆசிரியை அமல்செல்விபள்ளிக்கு வருவதே இல்லை. 2014 ஜூனில் இப்பள்ளியில் பணிக்கு சேர்ந்த இவர்ஒரு மாதம் கூட முழுமையாக பள்ளிக்கு சென்று,குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்கவில்லை. அதற்கு பதிலாககடந்தஓராண்டாகராசிபுரம் அடுத்த,கட்டனாச்சம்பட்டியைச் சேர்ந்த பட்டதாரி கார்த்திக் என்பவரைமாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்து வேலைக்கு அனுப்பி வருகிறார். தலைமையாசிரியைதன்னிச்சையாக ஒருவரை பணி அமர்த்திகல்வித்துறையை ஏமாற்றியது மட்டுமின்றிமலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்வியையும் கேள்விக்குறியாக்கியுள்ளார்.
இது குறித்துமலைவாழ் மக்கள் கூறுகையில்பட்டதாரி வாலிபரும்வாரத்தில்இரண்டு அல்லது,மூன்று நாள் மட்டுமே பள்ளிக்கு வந்துவிட்டுகீழே இறங்கிவிடுகிறார். மற்ற நேரங்களில்பள்ளியின் வாட்ச்மேன் மற்றும் சமையல் வேலையை கவனிப்பவர் தான்மாணவர்களை பார்த்துக் கொள்கின்றனர். இருவரும்வெள்ளிக்கிழமை மதியமே கீழே சென்று விடுவதால்இப்பள்ளியில் படிக்கும்ஏழு மாணவர்களும்கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.
இதில்அங்கு வீடு இல்லாத குழந்தைகள்சாப்பாடு இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர்உறவினர்கள் வீட்டில் தங்க வேண்டியுள்ளது. சில ஆண்டுகளாகவே இப்பிரச்னை உள்ளது. தலைமையாசிரியை,பள்ளிக்கு வராமல்முறைகேடாக வருகை பதிவு செய்துசம்பளம் பெறுகிறார். அதிகாரிகளும்,மலைப்பகுதி குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
உடல்நிலை சரியில்லை
தலைமை ஆசிரியை அமல்செல்வியிடம் கேட்டபோதுஎன் உடல்நிலை சரியில்லாததால்எனக்கு பதில் ஒரு பட்டதாரி ஆசிரியரை அனுப்பி வைத்தேன்அவருக்கு நான் தான் சம்பளம் கொடுக்கிறேன். மற்றொரு பள்ளியையும் கவனிக்க வேண்டியுள்ளதால் மிகவும் சிரமமாக உள்ளது,என்றார்.