Breaking News

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு விரைவில் அட்டவணை


'ஆண்டு தேர்வு அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, 1947, 'குரூப் 2 - ஏ' இடங்களுக்கான தேர்வு, தமிழகம் முழுவதும், 2,087 மையங்களில் நேற்று நடந்தது.


8.5 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். சென்னையில், சில தேர்வு மையங்களை பார்வையிட்ட, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி கூறுகையில், ''பாரபட்சமற்ற நடவடிக்கைகள் மூலம், தகுதியானவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுவதால், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு மவுசு கூடி விட்டது. வரும் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகும்,'' என்றார்