Breaking News

10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பிப்.8 முதல் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு


விருதுநகர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் இம்மாதம் 8ஆம் தேதி முதல் இணையதளத்தில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது w‌w‌w.‌t‌n‌d‌g‌e.‌i‌n​ என்ற இணையதளத்தில் தோன்றும் s‌s‌lc ‌e‌x​a‌m​‌ma‌r​c‌h​ 2016- p‌r‌i‌v​a‌t‌e​ ca‌n‌d‌i‌d​a‌t‌e-​ ‌ha‌l‌l​ ‌t‌i​c‌k‌e‌t​ p‌r‌i‌n‌t‌o‌u‌t என்பதை தொட வேண்டும். அப்போது புதிதாக தோன்றும் பக்கத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதியை பதிவு செய்தால் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார் அவர்.