Breaking News

Showing posts with label கதைப் பகுதி. Show all posts
Showing posts with label கதைப் பகுதி. Show all posts

விடுமுறைக் கதைகள்- “முதல் மனைவியை நேசியுங்கள்”


முதல் மனைவியை நேசியுங்கள்!

ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.
வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.
ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?” என்று கேட்டான். அவள் என்னல் முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் பதில் அவனை வருத்தியது

சரித்திரம் சொல்லும் உலகின் மாபெரும் வெள்ளம்!

100 ஆண்டுகளில் பெய்த மிகப் பெரிய மழையில் சென்னை மூழ்கிக் கிடக்கிறது. அதேநேரம் காலங்கள்தோறும் பெருவெள்ளங்களைப் பற்றி பல கதைகள் நம்மிடையே புழங்கிவந்துள்ளன. உலகில் பெய்த மிக நீண்ட மழை தொடர்பாக நமக்கெல்லாம் தெரிந்த பிரபலமான கதை, நோவாவின் கப்பல் கதை.

நோவாவின் கப்பல்

விடுமுறைக் கதைகள்- “ யார் முட்டாள் ? ”




அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த ஒரு தத்துவ ஞானி முல்லாவைச் சந்திக்க விரும்பி அவரை எப்பொழுது சந்திக்க முடியும் என்று கேட்டு அ,னுப்பியிருந்தார்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் தம்மைச் சந்திக்க வசதியாக இருக்கும் என்று முல்லா மறு மொழி அனுப்பியிருந்தார்.

அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தத்துவ ஞானி முல்லாவின் வீட்டுக்கு வந்தார். ஆனால் தவிர்க்க முடியாத ஒர் அலுவல் காரணமாக அந்த நேரத்தில் முல்லாவினால் வீட்டில் இருக்க இயலாமல் போய் விட்டது.

விடுமுறைக் கதைகள்- பதறாத காரியம் சிதறாது

குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.
குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன்
தன் நின்றிருந்தான்.
‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.
‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.
‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’
‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.
சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் கோபம். ‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.
‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.
சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்தி கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.
கற்பிப்பவன் எவனாயினும் கல்வி என்பது பெறுமதியானது தானே?

விடுமுறைக் கதைகள்---- “திகில் போட்டி”

அரண்மனையில் ஒரு போட்டி!

விஷ பாம்புகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது
10 கிராமங்கள், அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர் தேர்ந்தெடுக்கலாம்.
உயிர் பிழைப்பது சிரமம் என்பதால் போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும் யாரும் போட்டிக்கு வரவே இல்லை.

விடுமுறைக் கதைகள்-- “எதுவும் சில காலம்"


ஒரு பெரும் செல்வந்தர் தம்மை சந்திக்க வந்த வயதான துறவியை அழைத்துப் போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டினார்.


“இவ்வளவும் என்னுடையது சுவாமி” என்றார்.அதற்கு துறவி, “இல்லையேப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே”என்றார்.

“யார் அவன்? எப்போது சொன்னான்?” என்று செல்வந்தன் சீறினான்.“ஐம்பது வருடத்திற்கு முன்” என்றார் துறவி.அதற்கு செல்வந்தன், “அது என் தாத்தா தான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் விற்கவே இல்லை” என்றான்.

உன் உரிமையைப் பெற நீ போராடித்தான் ஆகவேண்டும்! போராட்டமே வெற்றியை தேடித் தரும்!


வாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை தோல்வியாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை. நமது அக்டோபர் 8, வேலைநிறுத்தப் போரட்டமும் அப்படித்தான்
ஒரு உயிரியல் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு கம்பளிப் புழு எப்படி வண்ணத்துப் பூச்சியாக மாறுகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அவர் தனது மாணவர்களிடம் ஒரு வண்ணத்துப் பூச்சி கூட்டினைக் காட்டி அடுத்த ஒரு சில மணி நேரங்களில் வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து போராடி வெளிவரப்போகிறது என்றும் ஆனால் யாரும் அதற்கு உதவக்கூடாது என்றும் கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.

சிந்தனைக் கதை- கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்


ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. "கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!" என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியன் "மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்!" என்றான்."கடவுளே! உதவி செய்!" என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்!" என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்

விடுமுறைக் கதைகள்-நல்ல மனம்வாழ்க

பூலோகத்தில், கிருஷ்ணதேவன் என்று ஒரு அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் நற்குணங்களின் பிறப்பிடம்; எத்தகைய கெட்ட தன்மையிலும் நல்லதையே காணும் சிறப்பு குணம் கொண்டவன்.
இம்மன்னனின் குணங்களைப் பற்றி ஒருநாள் தேவர்களிடம் சிலாகித்துப் பேசினான் தேவேந்திரன்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவர்களில் ஒருவன், ‘இந்த தேவேந்திரன் சொல்லும் அந்த அரசனை சோதித்து பார்க்க வேண்டும்…’ என்று நினைத்தான்.
அதன்படி, கிருஷ்ணதேவன் நாட்டிற்கு வந்தவன், அரசன் வரும் வழியில், ஒரு நாயைப் போல் தன் வடிவத்தை மாற்றி, இறந்து கிடப்பது போல் படுத்திருந்தான்.
செத்துக் கிடந்த நாயின் உடம்பில் இருந்து துர்நாற்றம் வீசியது. அந்தப் பக்கம் போன அனைவரும், நாற்றத்தைத் தாங்க முடியாமல், மூக்கைப் பொத்தியபடி சென்றனர்.
அதேசமயம் அந்தப்பக்கம் வந்த அரசன், நாயின் துர்நாற்றத்தை பொருட்படுத்தாமல், ‘இறந்துபோன இந்த நாய்க்குத்தான் எத்தனை அழகான பல்வரிசை…’ என்று சொல்லி, ஆச்சரியப்பட்டான்.

விடுமுறை கதைகள்- கொடுப்பவர் போல் நடிக்காதீர்

பாரசீக மன்னர் ஒருவர் ஆண்டுதோறும் தன் நாட்டு வீரர்களுக்கு போட்டி ஒன்றை நடத்துவார். ஆனால், கஞ்சப்பிரபுவான அவருக்கு பரிசு கொடுக்க மனம் வராது. ஒருமுறை, நவரத்தினங்கள் பதித்த மோதிரம் ஒன்றை ஒரு கயிற்றில் கோர்த்து, அரண்மனை மேலுள்ள மினாரில் தொங்கவிட்டார். அந்த மோதிரம் யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்ற எண்ணத்திலேயே அவ்வாறு செய்தார்.
மோதிரத்தை எடுக்க வேண்டும் என்பதே போட்டி! அதை எடுக்க பல வீரர்கள் வந்தனர். அதன்மீது அம்பை எய்தனர். ஊஹும்... யாருக்கும் மோதிரம் கிடைக்கவில்லை.

போராட்டம் தான் வாழ்க்கை- சிந்தனைக் கதை

ஏராளமான பணம் இருந்தும் கூட இளைஞன் ஒருவன், ஏதாவது பிரச்னையில் சிக்கித் தவித்தான். மனதில் நிம்மதி இல்லை. முதியவர் ஒருவர் அவன் வீட்டுக்கு வந்தார். வாட்டமுடன் இருந்த இளைஞனிடம், ""உனக்கு என்ன பிரச்னை?'' என்று கேட்டார்.
""நான் நிறைய சம்பாதிக்கிறேன். குடும்பத்திலுள்ள அனைவரும் இஷ்டம் போல செலவழித்தும் யாருக்கும் திருப்தி இல்லை. எப்போதும் வேலை செய்தே அலுத்து விட்டேன். நிம்மதியின்றித் தவிக்கிறேன்,'' என்றான் சோகத்துடன்.
பெரியவர் சிரித்தபடி, ""நிம்மதி தரும் இடம் ஒன்று இருக்கிறது. என்னுடன் வருகிறாயா... பார்க்கலாம்,'' என்றார்.
ஆர்வமாக அவருடன் புறப்பட்டான் இளைஞன். அவர் அவனை மயானத்துக்கு அழைத்துச் சென்றார்.
அவன் அதிர்ந்து போனான். ""என்னை ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள்?'' என்றான்.
""பார்த்தாயா... தன் மீது நெருப்பு எரிவது கூட தெரியாமல், நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்... இறப்புக்கு பிறகே மனிதனுக்கு நிம்மதி... அதுவரை மனிதனுக்கு பிரச்னை இருக்கவே செய்யும். வாழும் வரை போராடக் கற்றுக் கொள்.
போராட்டம் தான் வாழ்க்கை!