Breaking News

பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்


மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் பள்ளிகளில் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களை நடத்துவதற்காக, இதுவரை ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்காத மாணவர்களிடமிருந்து, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தால் மாணவர்களின் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்புகைச் சீட்டைப் பெற வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு பள்ளித் தலைமையாசிரியரும் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட ஒப்புகைச்சீட்டின் மொத்த எண்ணிக்கை விவரத்தை ஆகஸ்ட் 21-க்குள் பள்ளிகள் வாரியாக அளிக்க வேண்டும் என்று மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.