Breaking News

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் சமரசம் இல்லை- தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு --- அறிக்கை


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
*****************************"*
அறிக்கை
**********

தமிழக அரசு ஜாக்டோ அமைப்புடன் நடத்திய பேச்சு வார்த்தை யில் தெரிவித்த படி பட்ஜெட்டில் கோரிக்கைகளை நிறைவேற்றாதது ஏமாற்ற மளிக்கிறது.


பட்ஜெட் அறிவிப்பிற்குப் பின்   பிப்ரவரி18-ல் காலை 10.00 மனிக்கு ஜாக்டோ பொதுக்குழு  சென்னையில் உள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி   மாநில  அலுவலகமான JSR மாளிகையில்  கூடுகின்றது.

நடைபெறும் ஜாக்டோ உய்ர்மட்டக்குழு கூட்டத்தில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்க வலியுறுத்துவோம்.

ஆசிரியர்களின் , அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சமரசம் என்பதே கிடையாது.

ஜாக்டோ போராட்ட அறிவிப்பு செய்யாவிட்டால் தோழமை இயக்கங்களுடன் இணைந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிப்போம்

பீ.பேட்ரிக் ரெய்மாண்ட்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு