Breaking News

16 தாலுகாக்கள் புதிதாக துவக்கம்


தமிழகத்தில் புதிதாக, நான்கு வருவாய் கோட்டங்களையும், 16 தாலுகாக்களையும், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.சென்னை - எழும்பூர், மதுரை - மேலுார், கோவை வடக்கு, விருதுநகர் மாவட்டம், சாத்துார் என, புதிதாக நான்கு வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
 
        அதே போல், கீழ்பென்னாத்துார், மேல்மலையனுார், கண்டாச்சிபுரம், சூளகிரி, காரிமங்கலம், நல்லம்பள்ளி, காடையாம்பட்டி, பல்லாவரம், நெமிலி, பேர்ணாம்பட்டு, மானுார், சேரன்மகாதேவி, கொமாரபாளையம், தாளவாடி, கொடுமுடி, மொடக்குறிச்சி என, 16 புதிய தாலுகாக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.இவற்றை, முதல்வர், 27ம் தேதி துவக்கி வைத்தார்.