Breaking News

ஓய்வூதியம் பெறுவோருக்கு உயிர் சான்று அளிக்க உத்தரவு


சென்னை,: ஓய்வூதியம் பெறுவோருக்கு உயிர் சான்று அளிக்க, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், 2016-17ம் ஆண்டிற்கான உயிர் சான்று, வரும், மார்ச் 1ம் தேதி முதல் ஜூன், 30ம் தேதி வரை, அலுவலக வேலை நாட்களில், காலை, 10:30 மணிமுதல், மாலை, 4:00 மணி வரை, மாநகராட்சி ஓய்வூதிய பிரிவில் வழங்க வேண்டும்.
கடந்த, 1979ம் ஆண்டு டிச., 31ம் தேதி வரை, ஓய்வு பெற்றோர், மார்ச்சிலும், 1989ம் ஆண்டு டிச., 31ம் தேதி வரை ஓய்வு பெற்றோர், ஏப்ரலிலும், 1999ம் ஆண்டு டிச., 31ம் தேதி வரை ஓய்வு பெற்றோர், மே மாதமும், 2000ம் ஆண்டு ஜன., 1 முதல், தற்போது வரை ஓய்வு பெற்றோர், ஜூனிலும், தங்களது உயிர் சான்று அளிக்க வேண்டும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.