Breaking News

மாசுக்கட்டுப்பாட்டுத் துறையில் ஆராய்ச்சியாளர் பணி.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் தில்லியில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் பொல்யூஷன் கன்ட்ரோல் போர்டில் காலியாக உள்ள ரிசர்ச் அசோசியேட் மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: சென்ட்ரல் பொல்யூஷன் கன்ட்ரோல் போர்டு
பணி: ரிசர்ச் அசோசியேட் மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ
காலியிடங்கள்: 70.
1. ரிசர்ச் அசோசியேட் - 13
தகுதி: முன்னைவர் அல்லது எம்.இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
2. ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ - 57
தகுதி: அறிவியல் அல்லது சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் பட்டம் பெற்று என்.இ.டி (ஜே.ஆர்.எஃப்) தேர்வில் தேர்ச்சி அல்லது ஏதாவது டிகிரியுடன் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.03.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cpcb.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.