Breaking News

நாளை 19.3.15 ஃதமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு:249 கைதிகள் எழுதுகின்றனர்


தமிழகம் முழுவதும், 249 சிறைக் கைதிகள், நாளை, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
சென்னை புழல் சிறையில், 80 பேரும், மதுரை சிறையில், 99 பேரும், கோவை சிறையில், 70 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.வேலுார் மத்திய சிறை கைதிகள், 11 பேர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக, இன்று மாலை, புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

தேர்வு முடியும் வரை, அங்கேயே தங்குவதற்கு, ஏற்பாடுகள் செய்யப்பட்டுஇருப்பதாக, சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.