Breaking News

10ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்


சென்னை:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:'மார்ச் மாதம் நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், டிச., 24ம் தேதி வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், டிச., 24ம் தேதி மிலாதுன் நபி பண்டிகையை முன்னிட்டு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், டிச., 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.தேர்வுத் துறையின் ஆன்லைன் சேவை மையங்களில், சரியாக பதிவுப்பணி நடக்கவில்லை என, சில இடங்களில் புகார் எழுந்துள்ளது. எனவே, முதன்மை கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட, கல்வி அதிகாரிகள், சேவை மையங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி 
உத்தரவிட்டு உள்ளார்.