Breaking News

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்துக்கு புதிய இணை இயக்குநர்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்துக்கு புதிய இணை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த பி.ஏ. நரேஷ், பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குநராக (இடைநிலைக் கல்வி) மாற்றப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த குமார், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

 நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இவர் முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றியுள்ளார்.