Breaking News

அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் : தொடக்ககல்வி இயக்குநர் உத்தரவு.


தொடக்ககல்வி இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:

ஆதார்அட்டை பெற இதுவரை பதிவுசெய்யாத மாணவர்களைஅந்தந்த பள்ளிகளுக்கு அருகில்நடந்துவரும் சிறப்பு முகாம்களுக்கு அழைத்துச்சென்று ஆதார்அட்டை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க உதவிதொடக்ககல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிதலைமைஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

தங்களதுகட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகைபள்ளிகளில்பயிலும் மாணவர்கள் அனைவரும்ஆதார் அட்டைபெற்றுவிட்டார்களா என்பதைஉறுதி செய்ய வேண்டும். இந்தப்பணியின் முன்னேற்ற அறிக்கையினை, தலைமைஆசிரியர்களிடம் இருந்துபெற்று, தொடக்க கல்வி அதிகாரிகள் தொகுத்து வைக்க வேண்டும். இந்தப்பணி மிகமுக்கியத்துவம் வாய்ந்ததால், இதில் தனி கவனம் செலுத்தி,மாவட்டங்களில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆதார்அட்டை பெற்று 100 சதவீதம்இலக்கை அடைய உரியநடவடிக்கைஎடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.