Breaking News

திருச்சி மாவட்ட கலெக்டராக இருக்கும் ஜெயஸ்ரீ முரளிதரன் இடமாற்றம் செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக ஆர்.கிர்லோஷ் குமாருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி, தேனி, திண்டுக்கல் உள்பட 7 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்

 


தேனி மாவட்ட கலெக்டராக இருக்கும் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் கலெக்டர் என்.வெங்கடாசலம், தேனி மாவட்ட கலெக்டராகவும், விருதுநகர் மாவட்ட கலெக்டர் டி.என்.ஹரிகரன் திண்டுக்கல் கலெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் வி.ராஜாராம் விருதுநகர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் டி.முனுசாமி சிவகங்கை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசு பள்ளி கல்வித்துறை துணை செயலாளராக இருக்கும் எஸ்.பழனிச்சாமி நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இருக்கும் ஆர்.கிர்லோஷ்குமார் நகரமைப்பு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். (இதுவரை இந்த பொறுப்பை ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.கார்த்திக் கூடுதலாக கவனித்து வந்தார்.)
இந்த தகவலை தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்.