Breaking News

பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரம் செய்முறைத் தேர்வு: கல்வித் துறை திட்டம்


பிளஸ்2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ம் தேதிதொடங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல்கள் தேர்வுத்துறைக்குவந்து
சேர்ந்துள்ளது. தற்போது அவற்றை சரிபார்க்கும் பணியில்தேர்வுத்துறை  தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதையடுத்து நேற்று நாமினல் ரோல் பட்டியல் அனைத்துபள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றை சரிபார்க்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கூட்டம் நடக்கிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.தேர்வுத்துறை  அனுப்பிய பிரின்ட் அவுட்டுகளை அந்தந்த பள்ளிஆசிரியர்கள் நேரில் அந்த மையங்களுக்கு எடுத்து வர வேண்டும்.திருத்தம் இருந்தால் அதே  மையத்தில் திருத்தி இன்றே கொடுக்கவேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.  இந்த ஆண்டு காலஅவகாசம் ஏதும் கொடுக்காமல் ஒரே  நாளில் திருத்தம் செய்துகொடுக்க வேண்டும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.


இந்த பணிகளை விரைவாக முடித்த பிறகு பிப்ரவரி 7ம் தேதியில்இருந்து பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை நடத்த தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. மேலும், தொழில் கல்வி பாடங்களில் இடம்பெற்றுள்ள தட்டச்சு பாடத்துக்கான எழுத்து தேர்வுடன் செய்முறைத்தேர்வும் நடப்பது  வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அதில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 அறிவியல் பாடங்களுக்கானசெய்முறைத் தேர்வுகள் நடக்கும் போதே,  தட்டச்சு பாடத்துக்கானசெய்முறைகளையும் முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறைஉத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கான நாமினல் ரோல்  ஜனவரி 2ம்தேதி முதல் 6ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தேர்வுத்துறைக்குஅனுப்ப வேண்டும் என்றும் தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.