Breaking News

பள்ளி கல்வி துறை பணியாளர்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு

 பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குனர் சுற்றறிக்கை:

ஜூன் 1 நிலவரப்படி, மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும், மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் கலந்தாய்வு நடத்தப்படும்.நிதிக் காப்பாளர், மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் மாவட்டத்திற்குள் மாறுதல் பெற,27ம் தேதி; நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர், மாவட்டம் விட்டு மாவட்டம் விருப்ப மாறுதல் பெற, செப்.,28ல் கலந்தாய்வுநடத்தப்படும்.
பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, செப்.,29ல் நடக்கும். அன்றைய தினமே, உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோர் மாவட்டத்திற்குள் மாறுதல்; ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும், பிற அலுவலகங்களுக்கு மாறுதலும் வழங்கப்பட வேண்டும்.பிற பணியாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில், கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.