Breaking News

தமிழ்நாடு தொடக்க்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு மூலம் நியமனம் - 01012022 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 31122008 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் இறுதி தகுதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது - வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டது உரிமைவிடல் செய்ய விருப்பம் உள்ளவர்களிடம் உரிமைவிடல் கடிதம் பெற்று அனுப்புமாறு கோருதல் தொடர்பாக.


பார்வை 5 இல் கண்டுள்ள 12.09.2022 நாளிட்ட இயக்குநரின் செயல்முறைகளில் 31122008.

க்கு முன்னர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியில் சேர்ந்து பணிபுரியும் 357 நபர்களை கொண்ட இறுதி தகுதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது.

பார்வை 5 இல் கண்டுள்ள 13.09.2022 நாளிட்ட இயக்குநரின் செயல்முறைகளில் பதவி உயர்வு

கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டது. இப்பதவி உயர்வு கலந்தாய்வு தொடக்கக் கல்வி இயக்கத்தில் நடைபெறும் எனவும், தகுதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியலில் உள்ள அனைத்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் இக்கலந்தாய்வில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குடும்ப சூழ்நிலை மற்றும் உடல்நிலை சரியில்லை போன்ற காரணத்தால் 19.09.2022 மற்றும் 20.09.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துக்கொள்ள முடியாதவர்கள், இப்பதவி உயர்வினை தற்காலிகமாகவோ அல்லது நிரந்திரமாகவோ உரிமைவிடல் செய்ய விருப்பம் இருப்பின் அவர்களிடமிருந்து 15.09.2022 க்குள் உரிமைவிடல் கடிதம் பெற்று desisection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.