Breaking News

நிலக்கரி நிறுவனத்தில் 100 பணியிடங்கள்-- கடைசி நாள் : 2017 ஜன., 31

நெய்வேலி லிக்னைட் நிறுவனம் என்.எல்.சி., என்ற பெயரால் பெரிதும் அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 7 பிரிவுகளில் காலியாக உள்ள 100 இன்ஜினியரிங் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..பிரிவுகள்: மெக்கானிக்கல் பிரிவில் 50ம், EEE பிரிவில் 15ம், ECE பிரிவில் 5ம், சிவில் பிரிவில் 10ம், கன்ட்ரோல் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 5ம், மைனிங்கில் 10ம், கம்ப்யூட்டரில் 5ம் சேர்த்து மொத்தம் 100 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.வயது : 01.12.2016 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இதே பிரிவுகளிலான படிப்பை ஏ.எம்.ஐ.இ., மூலமாக முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பக் கட்டணம் : ரூ.300/-ஐ பாரத ஸ்டேட் வங்கியின் நெட் பேங்கிங் மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். தேர்ச்சி முறை : இந்த பணியிடங்கள் GATE 2017 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடைசி நாள் : 2017 ஜன., 31விபரங்களுக்கு : www.nlcindia.com/new_website/index.html