Breaking News

379 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது


தமிழகத்தில், 379 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது இன்று வழங்கப்படுகிறது. ஆசிரியர் தினத்தையொட்டி, பள்ளி ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை, தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு, 379 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


சென்னை சாந்தோம், செயின்ட் பீட்ஸ் பள்ளியில்,இன்று மாலை, 4:00 மணிக்கு நடக்கும் விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன், விருதுகளை வழங்குகிறார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'விருதுக்கான ரொக்கப் பரிசு,5,000 ரூபாயிலிருந்து, இந்தஆண்டு முதல், 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது' என, தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 379  பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது இன்று  மாலை 4 மணிக்கு  வழங்கப்படுகிறது. இதற்கான விழா சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ்  பள்ளியில் நடக்கிறது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் 201,  உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் 134, மெட்ரிக் பள்ளிகளை  சேர்ந்த ஆசிரியர்கள் 30, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 2 பேர், சமூக  பாதுகாப்பு துறை பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்–்கள் 2 விருதுகள் பெறுகின்றனர். இது தவிர மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம்(எஸ்இஆர்டி)  சார்பில் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் 10  பேருக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது.