Breaking News

வாக்குப் பதிவு தினத்தன்று சம்பளத்துடன் விடுமுறை


சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நாளான மே 16-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது.  1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 135பி பிரிவின் அடிப்படையில், தொழில் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் (தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட), உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி-சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது.
 


இது தினக்கூலி, தாற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பொருந்தும். இந்த அறிவிப்பை தொழிலாளர் நலத் துறையின் ஆணையர் பெ.அமுதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.