Breaking News

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதற்கான. கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன !!!

CPS ரத்து செய்ய வேண்டும் என்பதற்கான கருத்துக்களை பகிருங்கள்

***************************
அன்பார்ந்த ஆசிரியர் நண்பர்களே;


புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்று நமது தமிழ்நாடு 
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு திண்டுக்கல் உண்ணாவிரதத்தில் தொடங்கி பல கட்ட போராட்டங்களை நடத்தியதை அனைவரும் அறிவீர்.

அதன்தொடர்ச்சியாக ஜாக்டோவில் அக்கோரிக்கையை இடம் பெறச்செய்து போராட்ட களம் கண்டு இன்று புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய G.O.65 Date 28.2.16.  ன்படி அரசால் வல்லுனர் குழு அமைக்கப் பட்டுள்ளது.

அவ்வல்லுனர் குழுவில் நமது அமைப்பு  சார்பில் கருத்துக்களை எடுத்துரைக்க TNGTF CPS COMMITTEE உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ஏன் ரத்து செய்ய வேண்டும்?. 
அதில் உள்ள குறைபாடுகள் என்ன ?
போன்ற இன்னும் பல கேள்விகள் உங்கள் உள்ளத்தில் இருக்கலாம்.

அதனை  cpstngtf@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் ஏப்ரல் 25 க்குள் அனுப்ப கேட்டு கொள்கிறோம்.

தங்கள் கருத்துக்கள் அனைத்தும் cps tngtf committee யினால் தொகுக்கப்பட்டு ஆய்ந்து அரசு அமைத்துள்ள வல்லுனர் குழுவிடம் நமது CPS எதிர்ப்பு கருத்துக்களாக எடுத்துரைக்க வலுசேர்ப்பதாக இருக்கும் எண்பதால் தங்கள் உள்ளத்தில் CPS பற்றிய எதிர்ப்பு கருத்துக்களை
தொகுத்து 

 cpstngtf@gmail.com

 என்ற முகவரி மின்னஞ்சல் செய்திட அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

வாருங்கள் வடம் பிடிப்போம்!!!
வரலாற்றில் இடம் பிடிப்போம்!!!

TNGTF.     TNGTF.   TNGTF