Breaking News

மருத்துவப்படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு கட்டாயம் நடத்த வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு


மருத்துவப்படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு கட்டாயம் நடத்த வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு கட்டாயம் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான பொது நுழைவுத் தேர்வை கட்டாயம் நடத்த மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படும் தேதி நாளை முடிவு செய்யப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.