Breaking News

அரசு சார்பில் விரைவில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு சார்பில் விரைவில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஏழாம் நாள் கூட்டம் காலை பத்து மணிக்குக் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத்துறை மற்றும் சுற்றுலாத்துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

கேள்வி நேரத்தின்போது, உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தருமபுரி அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அரசு சார்பில் விரைவில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் .