Breaking News

தா.சோ.பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா

 செப்-5. சிதம்பரம் அருகே தா.சோ.பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.


   தலைமை ஆசிரியர் திரு அசோக் விழாவிற்கு தலைமை தாங்கி உரையாற்றினார். உதவி தலைமையாசிரியர் திரு ரவி முன்னிலை வகித்தார். ஆசிரியர் திரு ஜெயவேல் அனைவரையும் வரவேற்றார்.  விழாவில் தலைமையாசிரியர்

கெளரவிக்கப்பட்டார். ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் திரு ஜான்சன் திருமதி எழிலரசி திருமதி வனிதா ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மாணவர்கள் விழாவில் கலந்துகொண்டு ஆசிரியர்களின் பெருமைகளைப் பற்றி பேசினர்.முடிவில் ஆசிரியர் திரு தட்சிணாமூர்த்தி நன்றியுரையாற்றினார்.