Breaking News

செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: தனித் தேர்வர்களுக்கான, அறிவியல் செய்முறைத் தேர்வு, 18ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பத்தாம் வகுப்பு துணை தேர்வில், அறிவியல் பாடத்திற்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும். அதற்கான தேர்வு, 18ல் துவங்கி, 20ம் தேதி வரை நடக்கும். பள்ளியில் படிக்காமல், நேரடியாக, 10ம் வகுப்பு தேர்வில் பங்கேற்க உள்ள, தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை தேர்வை எழுதிய பிறகே, மற்ற பாடங்களின் தேர்வுகளை எழுத வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.