Breaking News

குரூப் 4 தேர்வுகள்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு


தமிழக அரசின் காலிப் பணியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நிலஅளவர், வரைவாளர் உள்ளிட்ட 5,451 காலிப் பணியிடங்களுக்கான பணியாளர்களை நியமனம் செய்யும் பொருட்டு, நடத்தப்படும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345

**இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121

**வரி தண்டலர் - 8

**நில அளவர் - 532

**வரைவாளர் - 327

**தட்டச்சர் - 1714

**சுருக்கெழுத்து தட்டச்சர் - 404 ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற செப்டம்பர் மாதம் 8-ம் தேதியாகும். தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி வருகிற செப்டம்பர் மாதம் 11-ம் தேதியாகும். தேர்வு நாள் வருகிற நவம்பர் மாதம் 6-ம் தேதியாகும்.

விருப்பமுள்ளவர்கள் www.tnpscexams.net/www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து கூடுதல் விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது