Breaking News

தா.சோ.பேட்டை மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு தேர்தல்

 சிதம்பரம்- 24

தா.சோ.பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில்,  பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான மறு கட்டமைப்பு தேர்தல் இன்று நடைபெற்றது.

பள்ளியின் தலைமையாசிரியர் திரு அசோக் தலைமை தாங்கினார்.பெற்றோர் ஆசிரியர் தலைவர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திரு ஜெயவேல் ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் திரு மணிக்கண்ணன் முன்னிலையில் தேர்தல் நடைபெற்று தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு தலைமையாசிரியர்,பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.முடிவில் ஆசிரியர் திரு ஜான்சன் நன்றி தெரிவிக்க விழா இனிதே நிறைவிற்றது