Breaking News

அசத்தும் SSA மேற்பார்வையாளர்


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டார வள மைய வளாகம் முறையான பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக புதர்களும்,
செடிகளுமாய் காட்சியளித்தது..

கழிப்பிட வசதியும்,தண்ணீர் வசதியும் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது.. இதெல்லாம் பழைய செய்தி...

ஆனால் மேற்பார்வையாளராக பொறுப்பேற்ற திருமதி.சிவயோகம் அவர்களின் ஆர்வம் மற்றும் பணி ஈடுபாடு காரணமாக இன்று பளிச்சிடுகிறது..
பராமரிப்பிற்கான மொத்த செலவையும் தான் ஒருவரே ஏற்றுக்கொண்டு செய்துள்ளார் என்பது மிகவும் வரவேற்கத்தக்க விசயமாகும்..

தவறு செய்யும் அலுவலர்களை எளிதில் குறைசொல்லி விடுகிறோம்.. நல்லது செய்தால் எவருக்கும் ஏனோ பாராட்ட மனம் வருவதில்லை..
தன் அலுவலகத்தை சுத்தமாகவும்,சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வது அதிகாரியின் கடமை என்றாலும்கூட சிறு சிறு அங்கீகாரங்கள் அவர்களை மேலும் செம்மைப்படுத்தும்..
பாராட்டி மகிழ்வோம்..