Breaking News

தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கு தேசிய விருது

மதுரை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை, சிறப்பான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்குவதற்காக, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
இவ்விருதுக்கு ஆசிரியர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களின் கருத்துக்களை ஆய்வு செய்து தேர்வு செய்ய மாநில தேர்வுக்குழு கூட்டம், சென்னை சேத்துப்பட்டு எம்சிசி மேல்நிலைப்பள்ளியில் வரும் 23ம் தேதி நடக்கிறது. தொடர்ந்து இறுதித்தேர்வு வரும் 24ல் நடக்கிறது.