Breaking News

இனி ஒப்பந்த அடிப்படையில் அரசு பணி கிடையாது.! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு.!

 ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், அரசு பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்ப்பு முறையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.


மாநில அரசுப் பணியில் உள்ள 57,000 ஒப்பந்தப் பணியாளர்கள் முறைப்படுத்தப்படுவார்கள் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநில அரசு இதற்காக ஆண்டுக்கு ரூ.1,300 கோடி கூடுதலாகச் செலவு செய்யப்படும் என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.