Breaking News

வேலூரில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது மாணவன் கத்தியால் தாக்குதல்.


வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவன் கத்தியால் குத்தியதால் தலைமை ஆசிரியர் பாபு பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த தலைமை ஆசிரியர் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.